புகழினி

April1, 2010

வைகை சூப்பர் பாஸ்டும் காட்டுமிராண்டிகளும்.

Filed under: சமுகம் — pukalini @ 23:04

நானும் எனது மனைவியும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு வேலையாகப் போக வேண்டி இருந்தது. பேருந்துகளில் பயணம் செய்வதினை விட ரயிலில் பயணம் செய்வது கொஞ்சம் இலகுவாக இருந்தபடியால் முன்னாடியே பதிவு செய்து போகலாம் என்று முடிவெடுத்தோம்.  பதிவு செய்யப் போன மனைவி பாண்டியனில் போகலாம் என்று காத்திருப்போர் பட்டியலில் பெயரைக் கொடுத்து விட்டு வந்தாள்.  இரவுப் பயணம், காலையில் எழுந்திரிச்சு கிளம்ப வேண்டிய அவசரம் இல்லை என்ற நினைப்பு அவவுக்கு.  பின்னர் நல்ல டோஸ் ஒன்று கொடுத்த பின் நானே போய் வைகைக்கு பதிவு செய்து விட்டு வந்தேன்.
காலங் காத்தால எழுந்திருச்சு ஆட்டோ பிடிச்சு மதுரை சந்திப்புக்கு வந்தால் வழமை போல் மூத்திர வாசமும், பீ மணமும் வா  வா என்று கூவாமல் கூவி அழைத்தது. எல்லாம் வழமையானது தானே? படியில் ஏறி இறங்குவதற்குள் சென்னைக்கு நடந்தே போயிரலாம் போலிருந்தது. ஏதோ கொஞ்சம் தாமதித்து கிளம்பிய சூப்பர் பாஸ்ட் ஆடி அசைந்து சென்னைகு மதியம் கழித்து 1430க்கு வந்தடைந்தது. மதுரையில் இருந்து சென்னைக்கு மிஞ்சிப் போனால் ஒரு 500 கிலோ மீற்றர்கள் இருந்தாலும் சின்னக் கணக்குப் போட்டுப் பார்த்தால், சூப்பர் பாஸ்ட் ஊர்ந்து கொண்டு வந்திருப்பது தெரியும்.  யப்பானில் சுப்பர் சோனிக் ரயில்கள் தான் ஓடுது போல.
மதுரையில் இரு வெளிநாட்டு யுவதிகள் எங்களது பதிவுப் பெட்டியில் ஏறினார்கள்.  பரிசோதனையாளர் வந்து க்லைத்து விட்டார். ரொம்பக் கெடுபிடியான ஆள் போல என்று நினைத்தேன். வண்டி திண்டுக்கல், திருச்சி தண்டி வந்ததும் கேவலம்  புரிய வந்தது. எல்லாக் கூட்டமும் பதிவுப் பெட்டிகளுக்குள் திபு திபு என்று ஏறி இடம் பிடிக்க அடிபட்டார்கள். அட கருமாந்திரமே இப்படித் தெரிந்திருந்தால் இரண்டு நாட்கள் இருவர் சொந்த நேரத்தை செலவு செய்து முன் பதிவு செய்திருக்கத் தேவையில்லையே?கிராமத்து சனங்கள் மட்டுமல்ல, படித்துக் கிழித்த பகுத்தறிவாளர்களும் அந்தக் கூட்டங்களில் அடக்கம். கட்சிக் கூட்டத்து போகிறவர்களும் தான்.
ஒவ்வொரு முறை வண்டி நிற்கும் போதும் தலைவலி. அதிலும் குழந்தைகளுடன் வந்து இடம் கேட்டு முறைக்கும் தாய்மார் செம ஜோர். அவசரத்துக்கு மூத்திரம் போகக் கூட முடியவில்லை. பின்ன என்ன மயித்துக்கடா இப்படி பதிவு செய்து வந்தோம் என்று ஆகி விட்டது. சாதாரண சீட்டுக்களுடன் பதிவுப் பெட்டிகளில் ஏறுவது தப்பு. உள்ள வந்து உட்கார்ந்து இருப்பவர்களுடன் சண்டை போடுவது எல்லாவற்றிலும் தவறு. சீட்டுச் சோதிப்பவர் வந்து சும்மா தேமே என்று மண்டையை ஆட்டி விட்டுப் போய் விட்டார்.  மதுரைக்கு வந்த சோதனையோ என்று கண்ணை மூடித் தூங்கவும் முடியவில்லை. இதுக்கே இப்படி என்றால் பீகாரில் கையை  ஆட்டி வண்டியை நிறுத்தி ஏறுபவர்கள் என்ன கூத்து பண்ணுவார்கள். தமிழ் நாடும் கிட்ட முட்ட பீகாரை முந்தப் போகிறது தானே?
இரண்டு நேர சாப்பாடு வண்டியில் எடுக்க வேண்டும். 3 இட்லி 1 வடை அல்லது பொங்கல் 1 வடை18 ரூபாய்கள். யாரிடம் சொல்லி அழுவது. எல்லாம் அந்தக் குத்தகைக் காரர்களுக்கே வெளிச்சம். இதெல்லாம் அந்தப் பரமேசுவரனுக்கே அடுக்குமா?

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.