புகழினி

August2, 2009

லண்டனுக்கு வாங்கோ……

Filed under: கதை — pukalini @ 21:23

லண்டனுக்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகி இருக்கிறது. அதற்குள்ளாகவே வாழ்க்கை இப்படி நாறடித்து விட்டது. எனக்கென்ன வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் வயசா? இந்த ஆவணியில் 25 ஆகுது. இந்த வயதுக்குள்ளேயே அடுத்த கட்டம் என்ன என்று தெரியாமல் தடுமாறத் தொடங்கி விட்டது.

வீட்டில் மூத்த பெண் பிள்ளை. அதனால் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே வளர்த்து விட்டார்கள். பின்னால் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாம்.எனக்கு இப்பொழுது கை காட்ட யாருமில்லை. கொஞ்சம் அழகாக இருந்து தொலைந்து விட்டேனா, ஆக்கினையின் ஆரம்பம். அழகென்றால் அப்பிடி இப்பிடி நயன்தாரா அளவில் இல்லை. சும்மா மா நிறம் தான். நம் மக்களுக்கு நிறத்தில தான் அழகு இருக்கென்று ஒரு நினைப்பு. கேவலம் மைக்கேல் ஜாக்சனே கறுப்பு பிடிக்காமல் அடாவடி பண்ணி இருக்கும் போது, வெள்ளை தான் சொர்க்கத்தின் நிறம் என்று நினைத்திருக்கும் கேடு கெட்ட தமிழ் மகா சனங்களுக்கு என்ன இழவு புரிந்திருக்கப் போகுது.

பள்ளிக்குப் போனாலும் கரைச்சல். கல்லூரிக்குப் போனாலும் இடைஞ்சல். எல்லாம் என் நிறம் பண்ணிய பாடு. ஆடு, மாடுகளுக்கு இந்த நிறம் தெரியவில்லையே? பாழாய்ப் போன மனிதர்களுக்குத் தான் இந்த நிறக்குருடா? அதிலும் வேசிகளின் கூடாரமாகி விட்ட தமிழ் நெஞ்சங்களுக்கு வேறு என்ன தான் புரியும். பரவை முனியம்மா போட்டுக் குளிக்கும் சவர்க்காரத்துக்கு இந்திக்காரி விளம்பரம். பச்சை மண்ணைக் காட்டக் கூட ஒரு வெள்ளைத் தோல் தேவை. பார்த்துப் பார்த்து வளர்ந்த சனங்களுக்கு மண்டைக்குள் என்ன ஊறி இருக்கும்?

ஆனாலும் எனக்கு எடுப்பும், கொழுப்பும் கொஞ்சம் கூடத்தான். பின்னே, நாய்க் கூட்டம் எதுக்கு அலையுதோ அது என்னிடம் இருக்குதே? போதாதற்கு இளமை வனப்பும், வாலிப மிடுக்கும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா? சில, பல பன்னிக் கூட்டங்கள் முன்னுக்கும், பின்னுக்கும் பகடை உருட்டிக் கொண்டு திரிந்தாலும் நான் என்ன தருமனா ஏமாற? எனக்கு என் பெறுமதி தெரிந்திருந்தது. சும்மா வீணாய்ப் போகலாமா? மிஞ்சிப் போனால் டேய் இந்த பிகருடன் சாப்பிட்டனடா என்று சொல்லும் ஆணழகர்கள் இருந்த வரைக்கும் கல்லூரியில் தண்டச் செலவு வைத்ததில்லை.

ஐந்து வருடங்கள் முதுகலை படித்து முடிக்கும் வரைக்கும் நடந்தேறிய நாட்குறிப்புகளை எடுத்து விட்டால் நாட்டு நடப்பு நாறி விடும். என் பிள்ளை தங்கக் கம்பி, செப்புக் கோல் என்று பீற்றித் திரியும் அம்மாமார்கள் எல்லோரும் வாய்களை பினாயில் போட்டு தேய்க்க வேண்டும். ஆண் சிங்கங்கள் எல்லோரும் காதல் மன்னர்கள் இல்லையோ, மன்மதக் குஞ்சுகள் என்று நினைப்பு.

எனக்கு வெளி நாடு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு. அதுவும் லண்டனுக்கு. அமெரிக்காவில் தான் நம்ம ஊர் பன்னாடைகள் பன்னி மேய்க்குதுகளே? அதுக்கு என்ன வழி? என்னிடம் உள்ளது என்ன? பொறுத்தார் பூமி ஆழ்வார். மாப்பிள்ளை தேடும் போது சொல்லியாச்சு. எனக்கு லண்டன் மாப்பிள்ளை தான். இருந்தாலும் கொஞ்சம் சங்கடப் பட்டுத் தான் போனேன். இரண்டு வருடங்களாயிற்று ஒரு இழிச்ச வாயன் மாட்டுவதற்கு.

லண்டன் மாப்பிள்ளை அல்லவா. லண்டனிலேயே பெரிய கடை இருக்காம். வைத்திருக்கும் கார் மட்டும் ஒரு கோடியாம். பங்களா தான் வீடாம். என்ன அவரு படிச்சது வெறும் பத்தாம். அதுக்கென்ன இவ்வளவு தொழில் பண்ணுறவருக்கு படிப்பு என்னத்துக்கு? ஒரு மாதிரி அடம் பிடித்து அடிச்சு பிடிச்சு கலியாணம் பண்ணி லண்டனுக்கும் வந்தாச்சு.

அப்பாடி இவரு சுத்த மோசம், நான் வந்தது லண்டன் பார்க்க. ஒரு கோடியில கார் இருந்தாலும் வெளியே போனாத் தானே அது கார். இவருக்கு தொழில் முக்கியம். வயசு அப்படி. பத்து வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்தது ரொம்பத் தப்போ? லண்டன் மாப்பிள்ளை என்று தொப்பையையும், சொட்டையையும் அசட்டை செய்தது தப்போ? இளம் மனைவி, அதுவும் இருபத்தைந்து வயதில் காய்ந்து கிடக்கின்றது அந்த அரைக் கிழத்துக்கு புரியாதோ?

அப்பவே சொன்னார்கள். காசுக்காரன். 35 வயது. லண்டனில இருக்கிறான். எல்லாம் ஆடி முடிச்சிட்டு ஒரு பிள்ளை பெறும் மிசினை வாங்கிக் கொண்டு போகப் போறானென்று. அது தான் நடக்குதோ? நடக்கப் போகுதோ? ஒரு சினிமா, கடை தெரு என்று எங்காவது போக முடிகின்றதா? ஏன் வெளியே காற்று வாங்கத் தான் போய் வர இயலுதா? மரக் கட்டை. ஜடம். இதுகள் எல்லாம் எதுக்கு கலியாணம் கண்ணறாவிகளைப் பண்ணித் தொலைக்குதுங்கள்?

இங்க வெள்ளைத் தோலுக்கு மதிப்பும் இல்லை. ஏதோ பிச்சைக்காரி மாதிரி பார்வை. புருசனும் வீண். எனக்காக உயிரையும் தருவேன். சொர்க்கத்தையும் உள்ளங் கையில் ஏந்துவேன். மகாராணிக்கு இதயத்தினை கிழித்து அபிசேகம் செய்வேன் என்று புலம்பித் திரிந்தவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக கனவில் வருகிறார்கள்.

5 Comments »

  1. சொர்க்கத்தையும் உள்ளங் கையில் ஏந்துவேன். மகாராணிக்கு இதயத்தினை கிழித்து அபிசேகம் செய்வேன் என்று புலம்பித் திரிந்தவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக கனவில் வருகிறார்கள்.///////////////

    கனவில் வருகிறார்கள் இல்ல அப்புறம் என்ன

    Comment by Suresh Kumar — August3, 2009 @ 00:30

  2. pagalini

    kanavula nan varaena?

    Comment by jaisankarj — August8, 2009 @ 05:55

  3. புகழினி கனவுல நான் வரேனா?

    Comment by jaisankarj — August23, 2009 @ 19:12

  4. GOOD SUMMERY

    Comment by NARAYANAN — September2, 2009 @ 00:04

  5. உங்கள் எழுத்துக்ள் அதீத தரமா இல்லை அதீத தரத்துடன் ஒழுங்காக தொகுக்கப்படாதவை போல ஒரு குழப்பம்.

    Comment by venkattan — October15, 2009 @ 21:05


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Create a free website or blog at WordPress.com.