புகழினி

May29, 2009

பயணங்களில்…

Filed under: அலட்டல் — pukalini @ 19:23

கடந்த ஆறு மாதங்களாக மாற்ற முடியாத வழியாக பயணப் பாதை. ஒரு மனுப் பிறவி கூட சிரித்தது கிடையாது. வாழ்க்கையை நொந்து கொள்ளுவதை விட அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.அனுபவிடா.

ஆகா, இன்று என்ன புதுசா ஒன்று வந்திருக்கே; நல்லத் தான் இருக்கு என்று பின் தொடர்ந்தேன். என்னுடன் ஏறி என்னுடனேயே இறங்கும் ஒரு அழகின் சொருபம். பின்னாடியே சுற்றினேன்.  நான் தேர்ந்தெடுக்கும் அடுக்கு மாடிப் பேருந்தையே அந்த சொருபமும் தெரியும். முன்னே ஏற விட்டு  பின்னே தொடரும் கால்களும், கண்களும். மனசு கெட்டவனாயிருக்கும் போது தூரமாகவும் நல்லவனாக இருக்கும் போது நெருங்கியும்  பாதுகாப்பு வலயம் அமைக்கப் பட்டிருக்கும். அசம்பாவிதம். மேல் மாடிக்கு ஏறும் போது பின்னாலேயே  கொஞ்சம் கிட்டவாக போயிட்டனோ? வைகுண்ட வாசல் வரைக்கும் தரிசனம் கிடைக்குதே? அப்பாடா இனிமேல் கொஞ்சம் தூரமாகவே மேயலாம். ஆழ்ந்து நுணுக்கமாக ஆராய்ந்ததில் கிடைத்தது. தேவியின் கோவில் எனது மடைப் பள்ளிக்கு பக்கத்தில் தான். பாவம் என்னைப் போலவே கொஞ்சம் கையைக் கடிக்கும் சூழ் நிலை. இரண்டே ,இரண்டு குதி வைத்த காலணிகள். முகத்துக்கு மட்டும் சின்னதாக ஒரு பூச்சுப் படை. பிடிக்காதது- இருக்கை கிடைத்ததும் செத்த கோழி மாதிரி முறிந்து விழும் தலை. தூக்கத்தில். தூக்கத்தில் இருக்கும் பெண்ணை அனுபவிப்பது தப்பாம். ஆகவே,  வெளியே மட்டும் ரசனை.

இவன் ஒரு அஜால் குஜால் பேர் வழி. எனக்கு பக்கத்திலேயே வேலை.  நிறுத்தத்துக்கு வந்ததும் வராததுமாம் யாரையோ தேடுவான். யாரென்று புரிந்தது. ஒரு நாள் நானும் பின்னாலேயே பின்னூட்டம் கொடுக்கப் போனேன். முழங்காலுக்கு மேலே ஏறிய சட்டை. எண்ணெய் பூசி வழ, வழ என்று இருந்தது. ஆனாலும் மூஞ்சி மந்திக்குச் சகோதரம் என்று காட்டியது. ஒரு நாள் அவனை அவனின் மனைவியுடன் பார்த்தேன். அவனை நொந்தேன். இப்பொழுதும் இருவரும் யாருக்கோ தேடுவது புரியவில்லை.  தேவதையை விட சாத்தான் தான் நல்லாயிருக்குமோ? எதுக்கு?


அடுத்தது ஒரு தமிழ்க் குலக் கொழுந்து இடையில் தொற்றி கடைசி வரை  வருபவள். இப்பொழுதும் தமிழிச்சியாக இருக்க முயல்பவளோ? அடிக்கடி கண்கள் தான் சந்தித்து உள்ளன.  சனக்கூட்டம். ஒரே ஒரு இருக்கை தேடுவாரற்று இருந்தது. உள்ளே நுழையும் போது  ஒரு தாய்க்குலத்தின் முடியை இழுத்து விட்டேன். என்னாடா கோபத்தைக் காணோம். புன்னகை மலருதே என்று நோக்கினால் நம் குலக் கொழுந்து. அடிக்கடி  பரிமாறுவதால் வந்த நெருக்கமோ? சனி. கடேசி இருக்கை. நான் மட்டும் தனியே. அவளும் எனக்கு அருகில். அவளுக்கு அடுத்து ஒரு காதல் கேடிகள். கொஞ்சலும், விஞ்சலும். அவளுக்கு பிடிக்கவில்லையாம். இருக்கை மாறி எனக்கு மறுபக்கம்  அமர்ந்தாள். ஆகா, வெறுப்புக் காட்டுறாளே?  அந்த சேட்டைகளுக்கு. இது நல்லதா படலியே. தூர விலக்கு.

இன்னுமொன்று, அடிக்கடி இப்படி இருக்கக் கூடாதென்று படிப்பினை ஊட்டுவது. முழங்காலுக்கு மேலே சட்டை போட்டால் ஊசிப் போன கொட்டுப் பனைக்கு பாவாடை கட்டியது போலிருக்கும். விடாது மழை போல  தினமும் கண்ணூறு கழியப் பார்க்க வேண்டும்.

இன்று வேட்டை  வாய்க்கவில்லை. சோர்ந்து போயிருக்கையில் திடீர் அதிர்வு. இது என்ன கனவா? இங்கேயும் இப்படி ஒரு பெண்ணா? கடைந்தெடுத்த  கணக்கான அழகு.  ஆடைகளில் நேர்த்தி. தெரிந்தும் தெரியாமலும் கொள்ளை கொள்ள வைக்கும் செதுக்கல். கன்னக் கதுப்புகளில் கபடியாடத் தோன்றும் மென்மை. சுருண்டு விட்ட முடியால்  தலையை மறைக்கும் நேர்த்தி. ஆகா உடலெங்கும் சுடாகின்றதே?  ஏன் இப்படி? இவ்வேளையில் வரணும்?  மனசு கலங்குதோ? வேண்டாம்.  பொட்டைக் காணோம். கழுத்தில் கயிறையும் காணோம்.  வேண்டாம் உனக்கு ஒத்து வராது. விலகு.

ம்ம்ம்ம்… எதிர்பார்ப்புகளோடு இன்றும் நிறுத்தத்தில்….

1 Comment »

  1. ha ha ha….யாவருக்கும் கிட்டும் சில சமய அனுபவங்கள்…..நானும் இதுபோலவே நெடுந்தூர பயணங்களில்……

    Comment by lemurya — July5, 2009 @ 02:27


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Blog at WordPress.com.