புகழினி

January26, 2009

இதயத் திருடியா? செருப்புத் திருடியா?

Filed under: சமுகம்,Uncategorized — pukalini @ 07:51

மாமா இறந்து விட்டார். குடிகாரன். வழக்கமான மரணம். ஈரல் வெடித்து வாய், மூக்கு, சல வாசல், மலவாசல் வழியாக இரத்தம் கட்டி கட்டியாகக் கொட்டி  இரண்டு மணி நேரத்தில் வலிக்காமல் போய்ச் சேர்ந்து விட்டார். மச்சான் வெளி நாட்டில் வருவதற்கு ஒரு வார காலம் எடுக்கும். சவத்தை பதப்படுத்தி வீட்டில் வைத்தாச்சு. அங்கு தான் என் காதல் தேவதையின் தரிசனம் ஆரம்பம்.


அவள் மச்சானின் மனைவி வழியில் உறவாம். வயசு பதினைந்து  இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. செம பிகரு தான்.  சவம் கிடப்பதற்கு நல்ல காவல். என் தூக்கத்தை அவள் தான் பறித்து விட்டாளே?எனக்கும் என்ன வசசு இருபது தானே? திரியில்லாமலேயே பத்திக்கிச்சு. மாமா வீட்டில் யாரும் இல்லை. மச்சாள் மட்டும். அதனால் நான் எடுபிடி. கொஞ்சம் விளப்பமாவே இருந்த படியால் நிறைய வேலைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு செய்தேன். அவளுக்கும் என் துடிப்பும், எடுப்பும் பிடித்துப் போய் விட்டது போல. மச்சான் வருவத்ற்கு இடையிலேயே எங்களுக்குள் ஒரு சிலந்தி காதல் வலை கட்டி விட்டது.

சவம் வீட்டிற்குள் படுத்திருப்பது தெரியாமல் எங்கள் காதலும் செம கதியில் சுதி கூட்டிக் கொண்டிருந்தது.இடையில் ஒரு சம்பவம். மச்சாளின் புதுச் செருப்பைக் காணவில்லை. முந்நூறு தேறுமாம். விசாரணைக் கமிஷன் என் தலைமையில்.  காரண காரியங்களையும் சாட்சிகளின் வழி மொழிதல்களுடன் என் இதயத் திருடி தான் செருப்பையும் திருடியது  நிரூபண்மாயிற்று.

மனசு அப்படி இருக்கக் கூடாதா என்று ஏங்கத் தொடங்கியது. சவம் வெளியேறி விட்டது. தீர்ப்பு நாள். திருடியின்  அம்மம்மா எதிராளியின் சார்பில் பிரசன்னம். தெரியாமல் பிள்ளை மாறிப் போட்டுக் கொண்டு போயிட்டாளாம். பொருள் மீள ஒப்படைப்பு. என் இதயத்தையும் சேர்த்து. ஒரு வருத்த்ம், சங்கடம் ஏதும் கிடையாது. பழகி விட்டது போல. மாமி உள்ளுக இருந்து ‘இதுகளுக்கு இதுவே வாடிக்கையாப் போச்சு’ என்று புறுபுறுத்தது உரக்கவே செவியில் விழுந்து என் மர மண்டையில் உறைத்தது.

மாமிக்கு ஏற்கனவே  எங்கள் காவியங்கள் எல்லாம் மச்சாள் வழி அரங்கேறியிருக்கும் போல.பழிக்குப் பழி வாங்க வேண்டுமே? என்னே குடும்பம். இந்த  மினுக்குத்  தளுக்கு எல்லாம் வெளி வேடமா? காட்வெயார் தான் நல்ல இருக்கா? சொfட்வெயார் முழுக்க குழறு படியா? காத்திருந்தேன். மச்சான் திரும்பும் நாள். காதல்க் கன்னியும் கனியும் ரசத்துடன் சீண்டிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியவில்லை, எரியும் நெருப்பைக் கிளறிக் கொண்டிருக்கிறாள் என்று. மச்சான் கிளம்பி விட்டான். அவனுக்கு உரக்கச் சொல்லிய படி தள்ளி விட்டேன்  செருப்பை.

அவளுக்குக் கேட்டும், புரிந்தும் இருக்க வேண்டும். நான் என்ன சொன்னேன் என்று. அது வேறொன்றும் இல்லை.

‘செருப்பு’.

December29, 2008

ஆண்-(அ)சிங்கங்களா?

Filed under: Uncategorized — pukalini @ 19:14

ஈரோட்டில் இருந்து  மதுரைக்கு வந்து கொண்டிருந்தேன். பாத்திமாக்  கல்லூரிக்கு முன் வரும்போது அங்கு வைக்கப் பட்டிருந்த தட்டி ஒன்று மின் கம்பிகளின் மீது விழுந்து எரிந்தது. மின்மாற்றி கூட வெடித்து விட்டது.

அது ஒரு கலியாண வாழ்த்துத் தட்டி. அதிலிருந்த படங்களை நன்றாக உற்றுப் பார்த்தேன். ஏனென்றால் நான் கொஞ்சம் சுமாராகத் தான் இருப்பேன். அதிலிருந்த மூஞ்சிகளுடன் என்னை ஒப்பிட்டேன். பரவாயில்லை, எனக்கு எப்படியும் ஒரு 100 அடியிலயாவது தட்டி வைப்பார்கள் என்று திருப்திப் பட்டுக் கொண்டேன்.

அப்புறமா யோசித்துக் கொண்டே வீட்டுக்கு வந்தேன். அது என்ன ஒரு  பழக்கம்?காது குத்துறது, சடங்கு, கலியாணம் என்று எதுக்கெடுத்தாலும் தட்டி வைக்கிறது. அதுவும் அனுமதி பெறாமல்,எல்லோருக்கும் இடைஞ்சலாக. முடிஞ்சாலும் களட்ட மாட்டாங்க. குப்பை. இருந்தாலும், சிலருக்கு கூலி குடுக்குது. பிரிண்டிங் வேலை வாய்ப்பு. அந்த சீலைகள் குடிசைகளுக்கு மழைத் தண்ணீர் ஒழுகாமல் இருக்க, பெண்கள் மறைப்புக் கட்டிக் குளிக்க  என்று  உதவுகின்றன.

விடயத்துக்கு வருவோம்,

அந்தத்  தட்டிகளை பெரிதும் ஆக்கிரமிப்பது ரசினி, அசித், விசய் படங்கள் தான். அவர்களின் ஆசீர்வாதத்தால் தான் விழாவே சிறப்பா அமையுமாம். இவங்களால தான் அவங்க வாழுறாங்க. அவங்களுக்கு இவங்களில யாரைத் தெரியும். மிஞ்சிப் போனா ஒரு கடவுள் படமாவது போடலாம். அதிலும் யாரோட பெரிசு என்று போட்டி வேற.

நான் யோசிப்பதெல்லாம் ஒன்று தான். முடிஞ்சா அப்பா, சித்தப்பா, மாமா,அண்ணன் படங்கள போடுங்க. எதுக்கு  கண்டவனிண்டயையும் போட்டு அசத்தப் பாக்கிறீங்க? உங்க படங்கள போட்டா மரியாதை கிடையாதா? யாரென்றே தெரியாதா?  நீங்கள் எல்லாம் ஆண் மக்கள் தானா? அப்புறமா எதுக்கு இந்த காவடி தூக்குற வேலை? வெட்கமா இல்லையா? முடிஞ்சா உங்கட படத்தை போடுற அளவுக்கு உங்கள உயர்த்துங்க. இல்லாட்டி போத்துகிட்டு படுங்க.


பாவப் பட்ட பிறப்புகள் பெண்கள் தான். அதிலும்  அவங்களுக்கு  இடம் கிடையாது. அதில போடுற படங்கள  ஓராள்  இரவில பார்த்தால் கண்டிப்பா மாரடைப்பு தான் வரும் அவ்வளவுக்கு கர்ண கொடூரமா இருக்கும்.   இப்படி சட்ட விரோதம் பண்ணினா அரசு ஒண்ணுமே பண்ணாதா?


வயசுக்கு வந்துட்டாங்க…

Filed under: Uncategorized — pukalini @ 01:04

பெண்கள் காலாகாலத்துக்கு வயசுக்கு வாறது மிகவும் நல்லது தான். மனித சந்ததியினை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவதில பெண்களின் பங்கு மிகவும் அளப் பெரியது. அதற்காக இறைவன் கொடுத்திருக்கும் ஒரு அபூர்வ சுற்றோட்டம் தான் இந்த வயசுக்கு வாற நிகழ்வும். விஞ்ஞான மொழியில் மாதவிடாய் சக்கரம் ஆரம்பிக்கும் நிகழ்ச்சி.


சரி, விடயத்துக்கு வருவோம். ஒரு பெண் வயசுக்கு வந்தால் அதை ஊர் முழுவதும் தண்டோராப் போட்டு சொல்ல வேண்டுமா? அது அந்தப் பெண்ணின் மனதில் எந்த வகையான எண்ணங்களை உருவாக்கும், அவள் எவ்வளவு  கேவலமாக நோக்கப் படுவாள் என்பது அவளது பெற்றோருக்கும், சுற்றத்தாருக்கும் புரிவதில்லையா?


பழைய காலங்களில் பெண் வயசுக்கு வந்ததுமே குழந்தை பெறத் தயாராகி விடுகிறாள். அடுத்தது  கலியாணம் தான். அப்படிப் பட்ட கால ஓட்டத்தில் எங்க வீட்ட ஒண்ணு ரெடியாகி விட்டது. யாராவது வந்து கூட்டுட்டு போங்கடா எண்டு  சொல்லாமச் சொல்வதற்கு இந்த மாதிரி விசேசங்கள் எல்லாம் நடத்தினார்கள்.


இன்று எல்லோருக்கும், எல்லாமே தெரியும் நிலை. வயசுக்கு வந்து, 15 வருடங்களுக்கு பின்னர் மணம் முடிக்கும் நிலைமை. இப்பவும் இப்படியான அசிங்கம் பிடித்த, செல்லாக் காசுக்கு கூட பெறுமதியற்ற சடங்குகள் தேவையா?

வீட்டில் உள்ள பெரியோர் உரிய வயது வந்ததும் பெண்களுக்கு உடலியல் மாற்றங்களை புரியக் கூடிய வகையில் தெளிவு படுத்த வேண்டும். அவர்கள் அதை ஒழுங்கான முறையில் எதிர் கொள்ள வகையில் பக்குவப் படுத்த வேண்டும். அதை விடுத்து கீற்றுக் கொட்டகை போடுற வேலைகளை  எல்லாம் மூட்டை கட்டி விட வேண்டும்.

சில வேளைகளில் மூத்த பெண்ணுக்கு விசேடமாக சடங்கு செய்து இருப்பார்கள். அடுத்ததும் தனக்கு இப்படி நடக்கும் என்று கற்பனைகளை வளர்த்து இருக்கும். அப்பொழுது  பெரியது பெரியாளாகியிருக்கும். பெரியவளுக்கும் இச்சடங்குகள் பிடிக்காமல் போயிருக்கும். இதை எப்படி சிறியவளுக்கு புரிய வைப்பது?  இல்லாவிட்டால் அவளுக்கு தன்னை ஒதுக்குவதாக ஒரு தோற்றப் பாடு ஏற்பட்டு விடும். ஆகக் குறைந்தது அயல் வட்டாரங்களில் செய்வது போல தனக்கும் செய்யவில்லையே என்றாவது  யோசிப்பாள்.  பெரியவர்களானதும் அது எவ்வளவு அசிங்கம் என்று அவர்களே உணர்வார்கள். ஆனால் அந்த வயதில் ஏற்படும் எதிர்பார்ப்புகளை எப்படி ஒதுக்குவது? இதுஎனது சொந்த  வாழ்வில் ஏற்பட்ட அனுபவம்.


இதை எப்படி இல்லாதொழிப்பது?

December26, 2008

மக்கள் சீனம்?

Filed under: Uncategorized — pukalini @ 19:21


கன்பூசியஸ், மார்க்ஸ், மா ஓ எனப் பல தரப்பட்ட தலைவர்களின் கொள்கைகளை அடியொற்றி வந்த நாடு. மக்கள் சம உடமையின் வசீகரத்தை அனுபவித்து வந்தனர். இதற்கு அவர்கள் கொடுத்த விலைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. சிலவற்றை இழந்து தான் பலதையும் பெற முடியும். மக்களும் வாழ்வின் ஆதார வசதிகளுக்கு குறைவில்லாமல் சுகமாகவே இருந்தனர். சாதாரண மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைந்தன.

உலகின் நவீன காலனித்துவச் சுழலில் சீனாவும் சிக்கத் தொடங்கியது. உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை தேட வேண்டிய கட்டாயம்.

ள் நாட்டுத் தேவைகளுக்கு மித மிஞ்சிய தயாரிப்புகள். அடிப்படை உற்பத்திகளை விட ஏற்றுமதிகளுக்கு அதிக முக்கியத்துவம். பணத்தின் மீது தீரா மோகம். காரணம், வல்லரசு மேன்மைக்கான ஆவல். ஆயுதக் குவிப்புக்கான நிதிச் சேகரிப்பு.

மக்களும் தமது அடிப்படை தேவைகளை விட்டு பணப் பொருளாதாரத்தில் நாட்டமடைந்ததால், வெளியுலக சந்தையை கண்டிப்பாக நாட வேண்டிய நிர்ப்பந்தம். விளைவு தனது சந்தைகளையும் உலகுக்கு திறந்து விட வேண்டிய நிலை. ஆக மொத்தம் முதலாளித்துவத்துக்கு அடியெடுத்து வைத்தாகி விட்டது.

இருந்தாலும் மக்கள் இன்னமும் பழைய கட்டுக் கோப்புகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உள்ளேயே உள்ளனர். புதிய முறையில் பணக்காரர் பயங்கரப் பணக்காரர் ஆக ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர்.ஆக மொத்தம் பழைய அடிமைத்தனமும், புதிய அடிமைத்தனமும் சேர்ந்துள்ளன. போததற்கு கருத்துரிமையும் மறுக்கப் பட்டுள்ளது.  ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி அனுமதிக்கப் பட்ட பல செய்தித் தளங்கள் மீண்டும் தடை செய்யப் பட்டுள்ளன.

சீனா என்ன தான் செய்கிறது? தான் வல்லரசு என்று யாருக்கு காட்ட வருகிறது? சொந்த மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை வழங்க முடியாத நாடு எப்படி வல்லரசு ஆக முடியும்?

பேப்பர் கேக்

Filed under: Uncategorized — pukalini @ 04:41

லத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்.
கடன் சுமையால் திவாலாகி விட்ட அரசுகள் மக்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன. வேலையில்லாப் பிரச்சினை, விலைவாசி உயர்வு,சுரண்டல்கள்-சாதாரண ஏழை மக்களை பிழைப்புக்கு வழியற்றுச் செய்து விட்டன. பஞ்சம், பட்டினி, கொள்ளைகள் என்பன தான் மிஞ்சி இருந்தன. பொதுமக்கள் கழிவுகளைக் கூட பொறுக்கித் தின்பதற்கு அடிதடி போட வேண்டிய நிலைமை. சிலர் சிறிதளவு பணம் இருந்தால் பண்ணைகளில் ஆடு, மாடு, பன்றி போன்றவற்றிற்கு போடப் படும் உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு பசியாறும் துர்ப்பாக்கியம். பணக்கார-அதிகார வர்க்கம் மட்டும் தான் தோன்றித் தனமாக கண்டும் காணாமல் தமது போக்கில் போய்க் கொண்டு இருந்தது.  நாட்டின் உழைக்கும் வர்க்கம் சாப்பாட்டுக்கு வழியற்று, ஊட்டச் சத்துக் குறைவால் நலிந்து, உழைக்கும் தெம்பை இழந்து கொண்டிருந்தது.

அப்பொழுது அந்நாட்டிற்கு ஒருத்தர் சுற்றிப் பார்க்கப் போனார். போன இடத்தில் சும்மா இருக்க முடியாமல் ஒரு ஏழை வீட்டையும் பார்க்க ஆசைப் பட்டுள்ளார். ஒரு வீட்டினையும் அடையாளம் கண்டு உள்ளே புகுந்தார். அங்கு வறுமை மட்டுமே தொட்டிலிட்டு  தூங்கிக் கொண்டு இருந்தது. வீட்டின் மளிகைக் பொருட்கள் பெட்டகம் பூஞ்சணம் பிடித்திருந்தது. அடுக்களையோ சிலந்திகளுக்கு நல்ல உறையாகிப் போயிருந்தது.

வீட்டில் இரண்டு குழந்தைகள் பிய்ந்து போன பாயிலே சுருண்டு படுத்திருந்தன. நம்மவர் அவர்களை  எழுப்பி, சுகம் விசாரித்துள்ளார். அவர்களும் கொட்டாவி விட்டுக் கொண்டே பேந்தப் பேந்த முழித்துள்ளனர். என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டதற்கு பேப்பர் கேக் என்று பதில் வந்தது. அதை எப்படி சமைப்பீர்கள் என்று கேட்டார், போனவர். பிள்ளைகளும் ஆர்வமாக, அம்மா பேப்பர் பொறுக்கப் போயிருக்கா, வந்தவுடன் அந்தப் பேப்பர்களைச் சுற்றி -தண்ணீரிலே நனைய வைப்பார்கள். நன்றாக நனைந்த பின் அதை நாங்கள் சாப்பிடுவோம். மிகவும் நன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

போனவர் மிகவும் மனசுடைந்து போனார். தொடர்ந்து இப்படி சாப்பிட உங்களுக்கு சிரமமாக இல்லையா? வேறு ஏதும் சாப்பிட ஆசை இல்லையா என்று விசாரித்தார். பதில் வந்தது, ‘சில நேரங்களில பேப்பரே கிடைக்காது’ என்று.

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.