புகழினி

June26, 2009

மலையாழத்தியுடன் 3 வருடங்கள்.

Filed under: மலையாளி — pukalini @ 01:14

நண்பனின் கதை.

மணி 11 ஆகி இருக்கும், கட்டிலில் குப்புறப் படுத்து பாதி சாமத்தைத் தாண்டி இருப்பேன். எனது அறை வாசிகள் எல்லோருமே துடிச்சுப் பதைத்து எழுப்பினார்கள். என்னடா கண்றாவி  எண்டு கேட்டால், பக்கத்து விடுதியில் இருக்கும் மலையாள துண்டுக்கு  காலையில் பிறந்த நாளாம். நான் அண்ணன் ஏதாவது செய்ய வேண்டுமாம்.  அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை. போதாதற்கு அந்தப் பெண் வெறு எனது வகுப்புவாசி. சரி ஏதாவது செய்து தொலையுங்கடா என்று சொன்னது தான் தாமதம். ஆளாளுக்கு ஒரு திட்டம் போட்டாங்கள். கடைசியில் ஒரு மட்டையைக் கொடுத்து விடலாம் என்று முடிவானது. அதுவும் யாரோ ஒருத்தன் தனது நண்பனுக்கு கொடுக்க இருந்தது. பெயரும் எழுதியாச்சுது. அப்புறமா குழப்பம் ஆரம்பமாச்சுது. யாருக்கு பிறந்த நாள் என்று. எனக்குத் தெரிந்து என்னுடன் இரண்டு மலையாளத் துண்டுகள் படிக்கின்றன. யாருக்கு என்ன பெயர் என்று இன்னமும் தெரியாது. இருவருக்கும் இரு சொல்லில் ஒரே மாதிரியான பெயர்கள். ஒன்று குண்டு. அடுத்தது ஒல்லி. அப்படித் தான் நாங்கள் அடையாளம் காண்பது.  நாங்கள் குண்டுப் பெண்ணுக்கே பெயரெழுதி விட்டோம். அப்புறமா அது ஒல்லிக்கு என்று தெரிந்து பெயரை மாற்றி அது தெரியாமல் இருக்க ரோசாப் பூவும்  கீறி கொடுத்து விட்டாச்சு. அங்கிருந்து நன்றியும், ஒரு சாப்பாட்டுத் தட்டில் கேக் துண்டும் வந்தது. அது எனக்கு மட்டும் தானாம். அப்புறம், இங்கிருந்து ஒரு அப்பிள் பழமும் கழுவிய தட்டுடன் பரிமாறியது.

அப்பாடா தொடங்கியது சனியன். அதுக்கப்புறமும் நான் அந்த ஒல்லிப் பிச்சானுடன் பேசியது இல்லை. ஆனால், அடங்கி வைத்து வெடிப்பது போல செய்தி மறு வளத்தால் சுழன்று அடித்தது. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதலாம். அன்றைய  தினம் நாங்கள் இருவரும்  இரவு; நடுச் சாமம் தாண்டியும் பெண்கள் விடுதித் துவாரத்துக்குள்ளால் காதல் தூது அனுப்புக் கொண்டிந்தோமாம். நல்லது. அப்படியே இருக்கட்டும் என்று விட்டாச்சு. அதுக்கப்புறம் தான் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. அவளை மடக்க திட்டம் போட்டவர்கள் எல்லோரும் எனக்குப் பயந்தோ இல்லை உறுதிப் படுத்தியோ விலகி விட்டார்கள். அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலானது. பாதி மலையாளிப் பசங்களுக்கு வார இறுதி நாட்களில்  வீடு போகும்  நேரங்களில் பயணத்தில் சூடு தேய்க்க பெண்டுகள் வேண்டும். அதிலும் படிக்கிற பெண்ணாக இருந்தால் வசதியாகாவும், நன்றாகவும் இருக்கும் என்பதற்காகவே  காதலிக்கிறமாதிரி ஒரு காபந்து பண்ணுவார்கள்.

இதற்கிடையில் எங்களுக்கான தனி விடுதியில்  தங்கி இருந்த இருவருக்கு மஞ்சள் காமாலை வந்து சேர்ந்தது. அதே நேரம் அவளுக்கும் காய்ச்சல் அடித்து. பாவம் வகுப்பிலேயே சோர்ந்து போனாள். எனக்கு ஏதோ சந்தேகம் பட அவளுக்கு எடுத்துச் சொல்லி  வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அவளுக்கும் அதே  வருத்தம் வந்து தொலைத்தது.  நானும் ஏதோ அக்க்றையில் உடம்புக்கு என்னாச்சு என்று அடிக்கடி பக்கத்துப் பெண்ணைக் கேட்க, அவளும் இவன் ஏதோ கரிசனை முற்றித் தான் கேட்கிறான் என்று இல்லாத ஒன்றை ஊதிப் பெருக்க எல்லோருக்கும் இருவரும் சோடியாம் என்று பத்திரிக்கை அடித்தாகி விட்டது. அடக் கருமத்தே அவளுடன்  இரண்டு வார்த்தைகள் சேர்ந்தாப்ப பேசி இருக்க மாட்டனே? அதுக்குள்ள இப்படியா? அதிலும் இந்த மலையாளிகளுக்கு மூக்கில் வியர்த்தால் ஆள் காலி. இப்படித் தான் ஒரு மலையாளம் பெண் வேறு ஒருவருடன் கொஞ்ச நேரம் சேர்ந்தாப்ப பேசினதுக்கு உனக்கு பாண்டிக் குன்னா கேட்குதாடி என்று  அடிக்காத குறையாய் திட்டுனவர்கள். இப்படி ஒரு விடயம் இருப்பது தெரிய வந்தால் என்ன நடக்கும். ஆரம்பித்தது பூசைகள்.

சும்மாவே என்னைப் பார்க்கிறவர்கள் பயப் படுவார்கள்.அப்படியான ஒரு கவர்ச்சியான உருவமைப்பு. ஊரில் இருக்கும் எவனையும் விட்டு வைக்காமல் சிநேகம் பிடித்து வைத்திருக்கன். சாப்பாடு போடுற ஆயாவிலிருந்து, கல்லூரி முதல்வர் வரைக்கும் பழக்கம். சொல்லும் சொல் சந்தை ஏறும். போதாதற்கு மலையாளக் கூட்டம் ஒன்றையும் பழக்கம் பிடித்து வைத்திருந்தேன்.  ஆக மொத்தம் என்னுடன் நேரடி மோதலுக்கு கொஞ்சம் பயந்தார்கள்.  உள்ளிருந்து போட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். எப்பொழுதாவது அக்கா கடைக்கு தம் அடிக்கப் போய் ஒரு மலையாளத்தான் அகப்பட்டால் போதும் அப்படியே பாச மழை பொழிய தொடங்கிடுவார்கள். நானும் குடை இருந்தும் நனைய வேண்டியது தான். உனக்குத் தெரியுமா அவளுக்கு உள்ளூரில ஒரு நண்பன் இருக்கான். அவனைத் தான் கலியாணம் கட்டப் போறாள். அதுக்கென்னடா எனக்கு என்ன வந்தது? அவள் யாரைக் காதலிச்சா என்ன? எவன் கூடப் போனால் என்ன? எனக்கு என்ன குடும்பமா முழுகிப் போயிரும்? எனக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்? அவள் யாரு நான் யாரு? மிஞ்சிப் போனால் 30 அளவிலையாவது உள் சட்டை போடுறவளாயிருக்கிறாளா?.

கடைசியாய் ஒரு அம்பு. எப்படித் தான் ஒரு பெண்ணை பற்றி இப்படிக் கேவலமாக  கதை கட்ட முடியுதோ? இடையில், தமிழ் நாட்டுக்கு படிக்க வரும் மலையாளத்திகளுக்கு உள்ளூரில மதிப்புக் கிடையாதாம். எனக்கும் நிறையத் தெரியும். போனாப் போகுது. ஆண்களுக்கு மட்டும் கம்பி நீளும் போது பெண்களுக்கு கசியக் கூடாதா? ஒரு  நாள் பஞ்சாபி தாபாவில் என் செலவிலேயே எம்சி அடிச்சுப் போட்டு ஒருத்தன் கக்கத் தொடங்கினான். சேட்டா, அந்தப் பொண்ணுக்கு கலியாணமாயிருச்சு. புருசன் அவுட்டென்று நினைக்கிறன். இல்லாட்டி விட்டுட்டு போயிருக்கலாம்.குழந்தையும் இருக்கலாமாம்.  அடப்பாவி. அடிச்சது முழுக்க  மூக்கால் காத்து மாதிரி வெளியே போயிற்றுதே.

அன்றிலிருந்து எனக்கும் கொஞ்சம் காதால்  சுடர்விடத் தொடங்கியது.(கண்டிப்பாகக் காதல் இல்லை. வெறும் பச்சாதாபம்.) பாவம் பொண்ணு நிறையவே அடி பட்டிருக்குது. அதனால் தான் சாப்பாடு தண்ணி இல்லாமல் இருந்து மெலிந்து போயிட்டுது.குழந்தை வேறு இருக்காமே? மறுமணம் செய்வதில் என்ன தப்பு. இவளோடு கூட வாழ்வதில் கண்டிப்பாக ஒரு அர்த்தம் கிடைக்கும்.  காதலிக்கும் போதே அப்பாவாகி விடுவேன். கலியாணாத்துக்கு முன்னரே ஊருக்கும் போய் குழந்தையுடன் ஒட்ட வேண்டும். அப்பொழுது தான் பெரியாளானாதும் சொந்த அப்பா மாதிரியான ஒட்டல் தெரியும். எனக்கு ஒரு குழந்தையே போதும். இரண்டுடனும் சந்தோசமாக இருக்கலாம். பாவம் அளு வேறு சரியான் நோஞ்சான். இரண்டுக்கு மேல தாங்கவும் முடியாது. வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கணும். யாருக்கா நாம் வாழ்கின்றோமோ அது பெறுமதிமிக்கதாக இருக்க வேண்டும்.

ஆக மொத்தம் எனக்குள் ஒரு நல்லவன் மாதிரி ஒருத்தன் உருவாகினான். அவளைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவளுக்கு உதவுவதாக எண்ணி, அவளை மிகவும் கீழ்த்தரமாக சிந்திக்கத் தலைப்பட்டேன். எனக்கு எவருமே இந்த உரிமையைத் தரவில்லை.  நானாக எடுக்கவுமில்லை. வித்தியாசமான உணர்வுகளின் போராட்டங்கள்.

அடுத்த மின்னஞ்சலில் வருவது பின்னால்……….

June20, 2009

நீ என்ன பெரிய புடுங்கியாடி?

Filed under: மலையாளி — pukalini @ 19:29

‘ஆமா, நீ முதல் முதல்ல கல்லூரிக்கு வந்த அன்றே என்ன நடந்தது? உன் மூஞ்சி மீசை இப்படி இருக்கே உள்ளே எப்படி என்று கேட்டு அழ வைத்தவர்கள் யார்? அடுத்த நாள் அதை மழித்து விட்டு வந்த போது உள்ளேயுமா எனக் கேட்டவர்களை மிரட்டி, வெருட்டி உன்னைக் காயாமல் பார்த்துக் கொண்டது யார்? எல்லாருமே உனது மலையாளக் கூட்டம் தானே? அப்பொழுது மட்டும் என் துணை எதுக்கு உனக்கு?  நானும் உன்  கூடப் படித்தவன் தானே? எதற்கு முன்னோர்களிடம் முறைத்துக் கொண்டேன்? பாவம் பிள்ளை படிக்க வந்த இடத்தில் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாய் படிக்கட்டும் என்று தானே?’

‘உன் உடம்பைப் பற்றி பேசுவது அநாகரீகம் தான். இருந்தாலும், நீ இவ்வளவு சொன்ன பின்னும் நான் ஏன் மூடி வைக்கணும்? உனக்கு ஒரு பட்டப் பெயர் இருக்குதே? உனக்கும் அது தெரியும் தானே? சிலர் அயன் பொக்ஸ் என்பார்கள் பலர் கரம்போர்ட் என்பார்கள். எனக்கு மொத்தத்தில் உருவி விட்ட உலக்கை மாதிரி, உயரத்தில் மட்டும் தான் ஆளா இருந்த. ஏதோ கனவுக்கன்னி கணக்கில புலம்புற?  நீயெல்லாம் எதுக்கு உள்சட்டை போட்ட? சும்மா பருவுக்கு போடுற பசை எதையாவது வாங்கிப் பூசி இருக்க வேண்டியது தானே? ‘

‘வகுப்பில் உனக்கு அருகில் இருந்து தொந்தரவு பண்ணினேனா? ஏன் உனக்கு கொஞ்சமாவது புத்தி வேண்டாமா? பக்கத்து, பக்கத்து இருக்கையில் இருந்து எப்படி உன்னை உற்றுப் பார்க்கலாம்? அப்படிப் பார்த்தாலும் அது உன்னை இல்லை, பக்கத்திலிருந்த கட்டையை என்று உனக்குத் தெரியாதா? பரிசோதனைக் கூடத்தில் விடாது கறுப்பு மாதிரி ஒட்டினேனா? உனக்குத் தான் மின்சாரமென்றால் நடுங்குமே? உனக்கு உதவ யார் வந்தார்கள்? ஐந்து வயது கூடிய உன்னை எவன் சீண்டுவான்? பாவம் பிள்ளை என்று ஒத்தாசையா இருந்தது, உனக்கு கடுப்பாயிற்றா?’

‘வாத்திமார்களிடம் வத்தி வைச்சேனா? முண்டம், உனக்கு காய்ச்சல் அடிச்ச போது மஞ்சள் காமாலை தான் என்று சொல்லி வீட்டுக்கு பத்திரமா அனுப்பி வைச்சது யாரு? வரவுப்பதிவேட்டில் உனது பதிவுகள் மிகவும் குறைவான போது சரிக்கட்டி பரீட்சை எழுதச் செய்தது யாரு? பல்கலைக் கழக பரிசோதனையிலும் உனது பேப்பருக்கு செய்து காட்டி  தாமதித்தது யாரு? நீ வெடிக்க வைச்ச  நாலு உபகரணக்களுக்கும் பொறுப்பெடுத்து  திருத்திக் கொடுத்தது யாரு?ஏண்டி உன்னைப் பார்த்துப் போன எல்லா நாளுமே பரீட்சையில் நான் கோட்டை விட்டது  யார் தப்பு?’

‘விடுதிக்கு போன் பண்ணி இம்சையைக் கொடுத்தேனா? ஒரு தடவையாவது உன் கைப் பேசிக்கு அழைத்திருப்பேனா? பரீட்சைப் பெறு பேறுகள் வந்த போதெல்லாம் நீ தானே எனக்கு அழைத்து பெண்கள் விடுதி முழுவதுக்கும் ஒலிபரப்பினாய்? சனியானால் உனக்கு ஆக்கினையா? அது உனக்கு மட்டும் தானா? எனக்கு படிப்பிச்ச ஆசிரியைக்கே விடுதி பூராக் கேட்க ஐ லவ் யூ சொன்னவங்கள் தானே? உனக்கு மட்டும் தான் வித்தியாசமா?  தண்ணி அடிச்சிட்டு கூத்தடிச்சால் ஓட்டைகளுக்கால் ஒட்டிப் பார்த்து கேவலப் படுத்தியது யாரு? எப்பொழுதாவது அசவரமாய் பேசக் கூப்பிட்டால் என் ஆளு என்று எல்லோருக்கும் தம்பட்டம் அடிச்சு சொன்னது யாரு? எவளோடையாவது, எங்கேயாவது பேசினால் அவளைக் கூப்பிட்டு மிரட்டியது யாரு?  நான் யாருடன் தான் பேச முடியும்?’

‘வெளியால் நான் தம் அடிக்கக் கூடப் போகக் கூடாதா? போன போதுகளில் நீ வெளியில் வந்தது என் தப்பா?  நேரங் கெட்ட நேரங்களில் உனக்காக கடை தெருக்களுக்கு போகச் சொல்லும் போது ஒன்றுமே தெரியலையா?’

‘ என்னுடைய சகோதரங்கள் உன்னை அண்ணி என்று கூப்பிட்டது பிடிக்கலையா? ஆரம்பத்தில் பிடித்துத் தானே இருந்தது? அவர்கள் என்றைக்காவது உன்னை தரக் குறைவாகப் பேசியது உண்டா? உன்னுடன் நான் நெருங்கிப் பழகியதால் இனிமேல் அண்ணி என்று கூப்பிடுகிறோம் என்று சொல்லித் தொடர்ந்தது யார் தவறு? சும்மா இருந்த என்னை  நீ நெருக்க, அண்ணா இது சரியில்லை. ஒரு பெண்ணின் மனசில் ஆசையை வளர்ப்பது தப்பு. உணர்வுகளை காட்டிய பின் விலகுவது தப்பு. உங்களுக்கும் அவளை பிடித்திருக்கு, அண்ணிக்கும் டபுள் ஓகே. பேசாமல் போய் காதலிக்கிறேன் என்று சொல்லிருங்க என்றது அவர்கள் பிழையா?’

‘ முன்னப் பின்னத் தெரியாத உன்னை,  படுக்கையில் இறுக்கி அணைக்கக் முடியாத ஒன்றை எப்படிக் காதலிக்கலாம்? எதுக்கு? உனக்கு ஏற்கனவே கலியாணம் ஆச்சு, குழந்தை வேற இருக்கு, புருசன் அவுட்டு என்று சொன்னவர்களுக்கு பரவாயில்லை, நான் பாத்துக்குப்பன் என்று பெண்களை வேறு கோணத்தில் வைத்து சிந்திக்கத் தொடங்கியது உன்னால் தானே? பாலக்காடு தாண்டி வரும் பெண்களை கேரளாவில் எவனுமே ஏறெடுத்துப் பார்க்க மாட்டான் என்று கலகமூட்டிய உன் சக ஆண் வர்க்கத்துக்கு சாட்டை கொடுத்து உனக்காக நெருங்கியது என் தப்பா?  மாசத்தில பாதி நாள் நோஞ்சான் கொழி மாதிரி துவண்டு போகும் உன்னை கட்டினால் என்ன ஆகும் என்று மிரட்டியவர்களுக்கு சமாதானம் பேசியது என் தப்பா?’

மிச்சத்தை மிச்சமிருக்கும் போத்தலையும் முடிச்சிட்டு வைச்சிருக்கன்.

June19, 2009

மலையாழத்தியின் வெடிப்பு.

Filed under: மலையாளி — pukalini @ 18:23

மலை+ஆழம்=மலையாழம்.

‘இதைப் பாருங்கள் இந்தப் பொறுக்கி நாய் இருக்கிறதே, இது ஒரு சுத்தமான கேவலம் கெட்ட  மனு.வெட்கம்,மானம்,சூடு, சுரணை, ரோசம் எதுவுமே கிஞ்சித்தும் கிடையாது.   நான் எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. இப்பொழுதும் என்னை இடைஞ்சல் செய்து கொண்டே இருக்கிறது. இதுக்கு என்ன செய்யலாம்? இதனால் நான் பட்ட துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அளவே கிடையாது.’

‘ நான் எப்பொழுது இந்தக் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனோ அப்பொழுதே எனக்கு எட்டுச் சனி தொடங்கிற்றுது. எத்தனையோ கல்லூரிகள் இருந்தும், எத்தனையோ பிரிவுகள் இருந்தும் வேலை மெனக்கெட்டு கொல்லத்தில் இருந்து இங்கு, இந்தப் பாடத்துக்குத் தான் வந்து சேரணுமா? அதுவும் மூன்று வருடங்கள் காத்திருந்து, காசு சேர்த்து ஆசைப் பட்டு சேர்ந்தால் இப்படியும் ஒரு இம்சை எனக்கு கிடைக்கணுமா?’

‘சேர்ந்த தொடக்கத்தில் என் சொருபத்தைப் பார்த்து பின்னால் அலைந்தவர்கள் பலர். அவர்கள் எல்லோரையும் கடத்தி விட்டு படிப்பம் என்றால் முன்னுக்கு ஒரு மூஞ்சூறு. நான் தான் யாருக்குமே எந்தப் பாவமும் செய்ததில்லையே? எந்தக் கெடுதலும் மனசால் கூட நினைக்கலியே? பின்னே எங்க அப்பா, அம்மா செய்த பழி தான் என்னை விடாது துரத்துதா?’

‘ வகுப்புக்கு வந்திருந்தால் பக்கத்து இருக்கையில் சனியன் குடியேறும். பரிசோதனைக் கூடம் போனாலோ பின்னாலேயே சுற்றிச் சுற்றி வரும். அட அதாவது பரவாயில்லை. கண்ணைக் கொஞ்சமாவது அங்கால இங்கால திருப்ப வேண்டாமா? அப்படி என்னத்தை தான்  நாலு வருசமா புகுந்து ,புகுந்து பார்த்தானோ? ஒரு பெண்ணுக்கு எத்தனை இடைஞ்சல்கள் வரும்.  சுடிதாருக்கு வெளியாலே தெரியும் உள் சட்டையைக் கூட சரிப் பண்ண முடியாது. பன்னாடை அதை வேறு வெறித்துப் பார்க்கும். கண்ட இடத்தில் கடிச்சாக் கூட சொறிய இயலாது. விடுதிக்கு வந்து ஆடை களைந்து பார்க்கும் போது எல்லாமே சிகந்து போய் இருக்கும்.’

‘விடுதிக்கு வந்தாலோ ஒரே கும்மாளம். வாயிற்காப்பாளனை சரிக்க் கட்டி பேசக் கூப்புடிறது. வந்தாலும் எட்டி, எட்டி உள்ள பார்க்கிறது. விடுதித் தொலை பேசி எண்ணிற்கு அழைத்து  யார் யாரோவிடமெல்லாம் தன் காதல் கட்டுரையை புலம்புறது. கூட இருக்கும்  கழிசடைகளை விட்டு அண்ணி, அண்ணி என்று அலற விடுவது. முழுக் கல்லூரிக்கும்  இருவரும் ஏதோ காதல் புறாக்கள் என்று பேப்பர் அடைச்சு விடுறது. அதிலும் சனியானால் போச்சு தண்ணியைப் போட்டுட்டு ஆட்டம், பாட்டம். அதுக்கு வேற  மலையாளப் பாட்டுக்கள். தாங்க முடியல.’

‘உள்ளுக்க தான் இப்படி என்றால் வெளியால் போனாலும் தொந்தரவு, முகர்ந்து கொண்டே பின்னால் வந்திரும். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பார்வையாலேயே கொல்லுறது. அப்பப்பா இவனாலேயே ஞயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் போவதையே நிறுத்தியாச்சு. கடை தெருவுக்கும் போக முடியல.’

‘போதாதற்கு வகுப்பில் உள்ள் மலையாளிகளைப் பிடித்து மலையாளம் படிக்கிறது என்று பீலா காட்டுறது. யார் வீட்டுக்காவது போயிட்டு வந்து கோட்டையத்தில் காணி பார்த்திருக்கன், ஆலப்புழாவில் வீடு கட்டுவமா என்று நச்சரிக்கிறது. வகுப்புக்கு பாடம் நடத்த வாறவர்களிடம் இருவருக்கும் ஏதோ தொடுப்பு இருக்கு என்று  போட்டு வைக்கிறது.’

‘ பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கும் போது திருநீறு தருவது. படிக்க விடாமல் வெறித்துப் பார்க்கிறது.  தான் பெயிலானதைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் நான் பாசானதுக்கு தண்ணிப் பார்ட்டி வைக்கிறது. தண்ணியில என்னைப் பற்றி கண்டதையும் உளறுவது.’

‘ஓணம் விழாக்களுக்கு கோலம் போடுறன் எண்டு  நக்கிக் கெடுக்கிறது. வேட்டி கட்டிக் கொண்டு வந்து ஏதோ பாசன் சோ மாதிரி எல்லோருக்கும் சீன் போடுறது. ஐஸ்கிரீமுக்கு அடிபட்டால் ஏதோ தேவ தூதன் மாதிரி கண்டவனிடமும் கெஞ்சி வாங்கித் தருவது.’

‘இதெல்லாம் எதுக்கு? என்னை மடக்கவா? இந்தத் தேவாங்கு என்றைக்காவது கண்ணாடியில முகத்தைப் பார்த்திருக்குமா? என் நிறமெங்கே கவுட்டுப் போட்ட கரிச் சட்டி எங்கே? நிலம் கூட்டும் எந்தன் முடியெங்கே, சொட்டை எங்கே? கொஞ்சமாவது புத்தி வேண்டாம்? எத்தனையோ ஆண் மக்கள் சுத்திச் சுத்தி வரும் போதே ஒதுக்கித் தள்ளிய எனக்கு இந்த எருமை மாடு தான் கண்ணுக்க நிக்குமா?’

‘ இத்தனை காலமும் பொறுத்தாச்சு கடைசிப் பரீட்சை காலத்தில் ஆவது சந்தோசமா, நிம்மதியா இருக்கலாம் என்றால்  கடைசிக் கட்டம் என்று நெருக்குவாரம் பண்ணுறான். தாங்க முடியலை.’


Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.