நானும் பல காலங்களாகப் புத்தகங்கள் படிக்கின்றேன். தமிழில் தான் அதிகம். தாய் மொழி அல்லவா? ஆனால் இதுவரை இந்த ஜெயகாந்தன், ஜெயமோகன் என்று ஒருத்தருடைய புத்தகங்களும் கண்ணில் அகப்படவே இல்லை. அதுக்காக எனக்கு இந்த முற்போக்குச் சிந்தனைகள் பிடிக்காது என்றோ, இல்லை என்றோவும் சொல்ல முடியாது. இவர்களைப் படித்துத் தான் முற்போக்குச் சிந்தனைகள் வளர வேண்டும் என்றும் இல்லை. இந்த ஜெயகாந்தன் என்னத்தை சாதித்து உள்ளார் என்று அரசு அவருக்கு கௌரவப் பட்டங் கொடுக்கின்றது. புரியவே மாட்டன் என்கிறது. இவர்கள் எழுதிக் கிழிச்சு என்ன நடந்தது? ஏதாவது புரட்சி? மிஞ்சிப் போனால் ஒரு கிராமத்தானுக்கோ இல்லை ஒரு கல்லூரி மாணவனுக்கோ இவர்களைப் பற்றித் தெரியுமா? மக்ஸீம் கார்க்கி யாரென்று தெரியுமா?
இந்த முற்போக்குவாதிகள் எல்லோரும் ஏதாவது ஒரு ஆங்கிலப் புத்தகமோ இல்லை சீன, ரஷ்ய அல்லது இலத்தீன் அமெரிக்கப் புத்தகத்தையோ படிக்க வேண்டியது. அப்புறமா அதை தமிழில் மேக்கப் போட்டு எழுத வேண்டியது. என்ன பிழைப்போ? இதுகெல்லாமா கௌரவப் படுத்துவாங்கள்? நானும் இதுவரை ஆயிரக் கணக்கில படிச்சிருக்கன். இவர்களைப் படித்தது இல்லை என்று கவலைப் பட்டது இல்லை. காரணம், இவர்கள் திக்கித் திணறிச் சொல்ல வருவதை மூலத்திலேயே தெளிவாகப் படிக்கலாம் என்ற நிலைமை.
அப்புறமா ஒரு பதிவில் ஜெயகாந்தனை நாய் என்று சொல்லித் திட்டியுள்ளார்கள். அது தப்பு. எல்லோருக்கும் நாய் என்பது கேவலமான விலங்கு என்று எண்ணமோ? மனிதனின் மலத்தைத் தின்று விட்டே அவனுக்கு விசுவாசமாய் இருப்பது நாய் ஒன்று தான். தயவு செய்து இனிமேல் திட்டுவதற்கு நாயை எடுக்காதீர்கள். அது உங்கள் வீட்டுச் சொத்துக்கா ஆசைப்பட்டது? உதவியவனை பார்த்துக் குரைத்ததா? வேண்டாம் நாய்களை விட்டு விடுங்கள்.
அன்பின் சகோதரருக்கு,
நீங்கள் பின்வரும் வலைத்தளங்களில் பேரறிஞர் அன்புடை ஜெயகாந்தன் ஐயாபற்றி அறியமுடியும்.
ராணிமைந்தன்….
http://en.wikipedia.org/wiki/Jayakanthan
http://www.tamilnation.org/literature/modernwriters/jeyakantan/index.htm
http://www.geocities.com/Athens/Acropolis/6551/jeya.htm
http://www.geocities.com/Athens/Acropolis/6551/jkb1.htm
http://members.tripod.com/~kkalyan/jkntn.html
Comment by ராணிமைந்தன் — February4, 2009 @ 06:28
how to contact you?
Comment by Thanga. mukunthan — April28, 2009 @ 07:51
///நானும் பல காலங்களாகப் புத்தகங்கள் படிக்கின்றேன். தமிழில் தான் அதிகம். தாய் மொழி அல்லவா?///
//ஆனால் இதுவரை இந்த ஜெயகாந்தன், ஜெயமோகன் என்று ஒருத்தருடைய புத்தகங்களும் கண்ணில் அகப்படவே இல்லை//
நல்லா comedy பண்றீங்க
Comment by கார்த்தி — January2, 2010 @ 10:36
good joke, are you mental? reading a lot in tamil, but not know jayakandhan, what kind of tamil book you are reading (saroja devi, paruva kalam), poda pogai…
Comment by vignesh — June25, 2010 @ 02:34