புகழினி

December4, 2009

மண்ணாங்கட்டி.

Filed under: சமுகம் — pukalini @ 03:53

இந்த மண்ணாங்கட்டிக்கு எப்போதுமே ஒரு மிதப்பான நினைப்பு. தான் தான் இந்த உலகத்திலேயே ஒரு உத்தம புத்திரன். எங்கேயோ ஒரு கடவுளுக்கு பக்கத்தில் இருந்து சாமரம் வீச வேண்டியவன். தவறுதலாக பூமியில் பிறந்து விட்டான். இப்பூவுல வாசிகளுக்கு தான் ஒரு அபூர்வமானவன் என்ற சிந்தனை. ஏதோ ஆறடி உயரத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு டொங்கு டொங்கென்று கைகளை விசிறிய படி நடந்தால் பெரிய இவன் என்று எண்ணம்.

இப்படித்தான் இந்த மண்ணாங்கட்டி பேருந்து நிலையத்தினூடாக நடந்து போய்க்கொண்டிருந்தான். முன்னால் ஒரு சிறுமி அழுது கொண்டு வந்தாள். அவளுக்கு வயது மூன்று இருக்கும். பாடசாலையில் இருந்து வந்து இருக்க வேண்டும். முதுகில் ஒரு புத்தகக்கூடை பின்னாலே இழுத்துக் கொண்டிருந்தது. கையில் ஒரு தாத்தாக் குடை வேறு. எப்படியோ கூட வந்தவரைத் தவற விட்டிருக்க வேண்டும்.

இப்படித்தான் முன்னரும் ஒருமுறை இந்த மண்னாங்கட்டி அனுபவப்பட்டிருந்தான். அது  சென்னையில். கோயம்பேடு  பேருந்து நிலையம். ஒரு சின்னப் பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டு நின்றிருந்தது. பக்கத்தில் எவருமே இல்லை. சுற்ற முற்றப் பார்த்து விட்டு போலிசிடம் கூட்டிக் கொண்டு போனான். இடையிலேயே அவளின் அப்பா வந்து கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

ஏதோ பெரிய சாதனை செய்த மன நிறைவு மண்ணாங்கட்டிக்கு. அந்தப் பெண்  குழந்தை அப்படியே நின்றிருக்குமாம். யாராவது இனிப்பைக் காட்டி கடத்திப் போயிருப்பார்களாம். அப்புறம் என்ன நடந்திருக்குமோ? தன்னால் அந்த ஒரு கொடிய வரலாறு தவிர்க்கப் பட்டு விட்டதாக மன நிறைவு.

அதே போலவே இந்தப் பெண் குழந்தையையும் உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு செயற்கரிய காரியத்தை சாதித்த மாதிரி இருக்கும். மண்ணாங்கட்டி இவ்வளவையும் சிந்தித்துப் பார்த்து அந்தப் பாப்பாவைத் தேடத் திரும்பினான். அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது தான் ஏற்கனவே பெரும் எண்ணத்தில்  நடந்து நிறையத் தூரம் கடந்து வந்து விட்டது.

மண்டைக்குள் என்ன இருக்கோ என்று மண்ணாங்கட்டி தான் என்று தலையில் தட்டி விட்டு, விடுவிடு என்று திரும்பவும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு  நடந்தான்.

November27, 2009

காதலி

Filed under: சமுகம் — pukalini @ 04:48

நானும் கன காலமாய் அந்தப் பெண்ணை பார்த்து வருகிறேன். மிகவும் அழகாய், அம்சமாய் இருப்பாள். அந்த இடத்தில், அந்த நேரத்தில் இருக்கும் பெண்களுக்குள்ளேயே அவள் தான் எடுப்பாயும், வசீகரமாயும் தெரிவாள். அவளைப் பார்த்த முதல் நாளில் இருந்து எனது காலைப் பயண நேரத்தையே அவளுக்காக மாற்றி இருந்தேன்.அவளுக்கும் தெரியும் நான் அவளைப் பார்ப்பது. எப்பவுமே அவளிடம் இருந்து ஒரு மெல்லிய சிரிப்பு வந்து கொண்டு இருக்கும்.

தொடருந்தின் உள்ளே சென்றாலும் நானும் அவளுக்கு பக்கமாகவே செல்லுவேன். சில நேரங்களில் அவளுக்கு இருப்பதற்கு இடம் கிடைக்கும்.பல தடவைகள் எனக்கும் கிடைத்திருக்கிறது. பக்கத்தில் இருந்து என்ன செய்வது அவளையே சோகமாய் பார்த்துக் கொண்டு பாவமாய் ஒரு லுக்கு விடுறது தான். என்ன அவளுக்கும் எனக்கும் ஒரு 2 அல்லது 4 வயதுகள் தான் வித்தியாசம் இருக்கும். அவள் கொஞ்சம் நிறமாய் இருப்பாள், நான் கொஞ்சம் கறுப்பு. அவளுக்கு நல்ல கறுத்த நீண்ட முடி. அதை அவள் அடிக்கடி கோதி வேறு விடுவாள். எனக்கு மண்டையைத் தான் தடவ முடியும். இருந்தாலும் என்ன? ஒரே இடத்தில தான் வண்டியில ஏறுகிறோம். இறங்கும் போது இரண்டு நிலையங்கள் தள்ளி இறங்குகிறோம். இது போதாதா இருவருக்கும் பொருத்தம் பார்க்க.?

என்னடா இது அவள் இன்று ஒருத்தனுடன் வருகிறாளே? மின்படியில் அவள் வரும்போதே நான் கவனித்து விட்டேன். மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கினேன். சே…. அவன் அவளிலும் உயரம் குறைவாக இருந்தான். சதாரணமாகத் தான் உடுத்திருந்தான். இருந்தாலும் எனக்கு வயிறு பற்றிக் கொண்டு எரிந்தது.ஒருமாதிரி என்னைத் திடப் படுத்திக் கொண்டு தூரத்தில் இருந்தபடியே ஒரு பார்வை பார்த்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்……..வண்டியில் போகும் போது இருவரும் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் இருந்து சில்மிசம் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.

இப்படியே சில நாட்களும் கடந்தன. ஒரு நாள் எனது நண்பனும் என்னுடன் வந்தான். பொழுது போக்காக எனது சோகக் கதையை அவனுக்கு கூறி ஆட்களையும் காட்டினேன். திடீரென்று அவன் ‘அடி செருப்பால, அது அவன் இல்லை அவள். இவ்வளவு காலமாய் இங்க இருக்கிறாய் இன்னமும் உனக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை’ என்று திட்டினான். நானும் நல்லாக் கவனித்துப் பார்த்தேன். ஆமா அது அவனில்லை அவன். அப்ப இவள்?? அவளா இவள்???


குறிப்பு:

இருந்தாலும் விடா முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தினமும் சோகப் பார்வை பார்த்துப் பார்த்து அவங்களை குழப்பியாச்சு.அந்தச் சோடி இப்பொழுதும் ஒரே நிலையத்தில் ஏறி ஒரே நிலையத்தில் தான் இறங்கும். ஆனாலும் இருவரும் ஒன்றாக இருப்பதில்லை. எல்லாத்துக்கும் பொறாமைப் பிடிச்ச பயலுகள் செய்யிற வேலை தான் காரணம். ஆனா அது நானில்லை.நானும் என்னுடைய ஆளுக்கு பக்கத்தில அடிக்கடி போய் நின்று என்னை ஞாபகப் படுத்திக் கொள்ளுறன். எப்பயாவது ஆண்களை ஏற்பாளா என்று?

புகைப்பவர்களா பொண்டாட்டி இப்படி சொன்னாளா?

Filed under: கதை — pukalini @ 04:45

எனக்கு கொஞ்ச நாட்களாக இல்லை,பல நாட்களாக இந்தப் பழக்கம் இருக்கு. பழைய காதல் மரிச்சுப் போனதில தொடங்கியது. இப்ப வந்த காதலியும் மனைவியுமானவா பல தடவை பல மாதிரியும் சொல்லிப் பார்த்தா. சொல்-வழி கேக்கிற மாதிரித் தெரியல.கடைசியா ஒரு அஸ்த்திரத்த எடுத்து விட்டா. எப்படி?

“நீங்க இதை விடாட்டி நான் குழந்தை பெத்துக்க மாட்டன்”
“ஏன்”
“குடிச்சிட்டு நீங்க சீக்கிரமா மண்டைய போட்டுருவீங்க. அப்புறம் நான் வளர்த்து, ஆளாக்கணும் என்று எனக்கு என்ன தண்டமா”
“……”
“புள்ளையும் தனிய அப்பனில்லாம வளர்ந்து கஷ்டப் படணுமா”
“சரிப்பா”
“அப்புறமா புள்ளையோட இருந்தா இன்னொரு கலியாணம் செய்யிறதும் கஷ்டம்”
.
.
இப்பிடிப் போட்டுத் தாக்கின பிறகும் என்ன செய்ய முடியும்?
“சரிப்பா இனிமே நான் தம் அடிக்கேல”

இதில அவவுக்கு ஆகவும் கோபம் வரக் காரணம், இப்பவும் நான் பழைய சோகத்தில தான் புகை விடுறன் எண்டு.

இருந்தாலும் களவா இப்பவும் புகை விடுவதுண்டு.
நீங்கள்?

October24, 2009

பொது- சேவை

Filed under: சமுகம் — pukalini @ 04:57

இரவு நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. வானத்து நிலாவை கரு மேகங்கள் மூடி மறைத்துக் கொண்டிருந்தன. சென்னையின் கடும் இருட்டைப் போக்க முயற்சித்த நிலாவுக்கும் கலைந்து செல்லும் மேகங்களின் முன்னால் தோல்வியே மிஞ்சியது. நிலாவுக்கும் அவசரம். அவளின் அம்மா அவசரமாக திருச்சிக்கு கிளம்ப வேண்டியதாயிற்று. இந்த நேரத்தில் எப்படி போக்குவரத்துகள் அமையும்?

இருந்தாலும் ஒரு ஆட்டோவைப் பிடித்து கோயம்பேட்டுக்கு போகச் சொல்லியாச்சு. அவனும் மீற்றருக்கு மேல் காசு கொடுக்கச் சொல்லிவிட்டு இடையில் கொஞ்சக் காசையும் வாங்கி பெற்றோலும் போட்டு ஆடி அசைந்து போய்க் கொண்டிருந்தான். போவதற்காவது அம்மாவின் பக்கத் துணை. வரும் போது எவ்வாறு திரும்பி வருவது? உலக வல்லரசுப் போட்டிக்கு அணுகுண்டுகள் வைத்திருந்தாலும் தனியாகப் போகும் பெண்ணுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்கே இடமில்லாமல் இருக்குதே.

ஆட்டோக்காரன் ஆட்டோவை ஓரம் கட்டினான். என்னப்பா என்று கேட்டதற்கு இங்கேயே இறங்கி நடந்து தான் போக வேண்டும் என்று போக்குக் காட்டி விட்டு காசையும் கறந்து கொண்டு போய்விட்டான். அவனுடன் சண்டை போடும் நிலையில் இருவருமே இல்லை.

கோயம்பேடு தனியார் பஸ் நிலையத்தை எட்டிக் கூடப் பார்க்க முடியாத தூரத்தில் இறக்கி விட்டுட்டான். இனி என்ன மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டியது தான்.   சென்னையின் கேந்திரப் பகுதி.  பள்ளமும் மேடுகளுடன் மூத்திர வாசனையையும் சுமந்து கொண்டு நின்றது. அது போதாது என்று சிலர் பெண்களைக் கண்டவுடன் அப்பொழுது தான் சலப்பை  வெடிக்கப் போகின்றதை உணர்ந்தவர்கள் போல் கைலியைத் தூக்கிக் கொண்டு போனார்கள். நல்ல மக்கள்.

பேருந்து நிலையத்தினை அடைவதற்குள்ளாகவே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி பெரு மூச்சாக வந்து கொண்டிருந்தது. அனேகமான எல்லாப் பேருந்துகளும் போய் விட்டன. சில பேருந்துகளுக்கு மட்டும் மாமாமார் நின்று கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். திருச்சி பேருந்து தான் முன்னுக்கே நின்றது. பரவாயில்லை. பக்கத்தில் ஒரு காவல்த் துறை அதிகாரியும் நின்று கொண்டிருந்தார். பேருந்தில் இடமும் இருந்தது. ஒரே ஒரு சீட்டுக் கேட்டாள்.

சீட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தவர் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு ஆட்களைக் கூவிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். திரும்பவும் கேட்டாள். பெண்களுக்கு ஒத்தை சீட்டு கொடுக்க முடியாதாம். நிலாவும் பொறுமையாக நின்று சீட்டுக் கிழிப்பவரை வேண்டிக் கொண்டிருந்தாள். காவல்க்கார மாமாவும் தான் உண்மையான மாமா தான் என்று காட்டுவது போல் கேட்டும் கேளாமல் மரம் மாதிரியே நின்றிருந்தார். அவளுக்கு  இனியும் பொறுமை கிடையாது. நீங்கள் எல்லாம் அம்மா, தங்கைகளுடன் வாழ்கிறவர்கள் இல்லையா? என்று தொடங்கி ஆர்ப்பாட்டம் பண்ணி முடித்தும் முடியாமல் அம்மாவுடன் வீட்டுக்கே திரும்பினாள்.

மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். நான் ஒரு மருத்துவர். எனக்கே இவனுகள் இப்படி சீனைக் காட்டுறாங்கள். வச்சிருக்காண்டா.  இனிமேலும் யாராவது அழுது குழறிக் கொண்டு வருவீர்கள் தானே?  அப்பொழுது தான் நானும் எனது சீனைக் காட்டுறன் என்று.

August13, 2009

அந்த உண்மைத் தமிழனுக்கு நன்றிகள்.

Filed under: அரசியல் — pukalini @ 08:05

படித்து முடித்தாகி விட்டது. அடுத்து என்ன? வேலை தேடுவதா?  ஊருக்குத் திரும்புவதா? அல்லது  காதலித்தவளுடன் எங்காவது தலை மறைவதா? எல்லாம் ஒரே குழப்பம் சாமியாகி விட்டது. மற்றவர்களுக்கு விடுமுறை. வீட்டிலே போய் கொஞ்சக் காலம் தண்டச் சோறு என்று திட்டு வாங்கும் வரைக்கும் சாப்பிட்டு விட்டு  மல்லாக்கப் படுத்திருக்கலாம். நமக்கு அப்படியா? ஊர்ப் பக்கம் தலை காட்ட முடியாது. என்ன செய்வியோ ஏது செய்வியோ கொஞ்சக் காலம் வீட்டு நினைப்பு வரக் கூடாது என்ற கண்டிப்பான நிர்ப்பந்தம். சாப்பாட்டுச் செலவுக்கு இனி மேலும் கையேந்த முடியாது.   காதலித்தவள் கை விடவில்லை. நீ கிளம்பி என்னிடம் வா. உனக்கு வேலை கிடைக்காட்டியும் நான் படிச்சுக் கொண்டே வேலை பார்க்கிறேன். வாழ்க்கையை ஓட்டலாம் என்று சமாதானம் சொன்னாள். நானும் மூட்டை முடிச்சுக்களுடன் விடுதியில் இருந்து கிளம்பினேன். நெடிய ஆண்டுகளில் எனக்கு வீடாக இருந்ததை பிரிவது எனக்கு வருத்தமாயில்லை. ஆனால், இது வரைக்கும் இப்படி ஒரு சிந்தனை என் மனதுக்குள் வராமல் இருந்தது. இப்பொழுது தான் புரிந்தது எனக்கு அடைக்கலமாகவே விடுதி தான் இருந்திருக்கிறது.

கிளம்பி திருச்சிக்கு வந்து சேர்ந்தேன். அடுத்தது என்ன? வீடு தேடலாம். புருசன் பொண்டாட்டியாக இருக்கலாம் என்று காதலித்தவளும் அரைப் பொண்டாட்டியானவளும் சொல்ல வீடு தேடும் படலம் தொடங்கியது.  காதலியோ சின்னப் பிள்ளை மாதிரி இருக்கிறாள் என்று   அவளுக்கும் சேலை கட்டி ஒரு முகவரைப் பிடித்து வீடு தேடும் படலம் ஆரம்பமாகியது.அடடா தமிழ் மகா சனங்கள் தான் எவ்வளவு கெட்டிக் காரர்கள் என்று மண்டைக்குள் விறைப்புத் தட்டும் வரைக்கும்  வீடு தேடினோம். ஒன்றிரண்டு வீடுகள் தட்டுப் பட்டு ஊர்ப் பேரைச் சொன்னவுடன் தலை தெறிக்க ஓடிக் கொண்டார்கள். இறுதியில் ஒரு வீடு தட்டுப் பட்டது. படித்த குடும்பமாம். படித்தவர்களுக்குத் தான் வீடாம். அதுக்கென்ன நாங்களும் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறோம் தானே?

ஒரே நாளில் வீடு குடி புகுந்தோம். மறு நாள் வீட்டுக்காரரிடம் இருந்து ஒரு அழைப்பு. உங்களை வீட்டில் வைத்திருக்கப் பயமாக இருக்கிறது. இன்று இரவுக்குள் நீங்கள் வேறு வீடு பாருங்கள் என்று செவிட்டாவடியப் பொத்தி ஒன்று போட்டார். என்ன செய்வது? பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிகள் நாங்கள். டாக்குத்தர், இஞ்சினியர் என்றவுடன் வீடு தர வந்தவர்கள் பிறப்பிடம் காரணமாக ஒதுங்கி விட்டார்களா? எங்களது காசு செல்லாதா? அல்லது வீட்டில் இருக்கும் பெண்டுகளுடன் படுக்க இடம் கேட்போம் என்று பயந்து விட்டார்களா? சோமாறிகள்.  நாங்கள் பயங்கரவாதிகளாம். எங்களுக்கு வேறு பிழைப்பே இல்லை. அவர்களின் கவட்டுக்குள் மணி அடிப்பதே எங்களது தலையாய வேலை. இதே ஒரு வெள்ளை நிறக்காரன் கேட்டிருந்தால் எங்க வீட்டில் ஒரு வெள்ளைக்காரனை வைச்சிருக்கம் என்ற பெருமைக்காவது வீடு கொடுக்கப் பட்டிருக்கும். நமக்கு? .

தமிழ் மக்களை நம்பினால் என்னையே செருப்பால் அடிக்க வேண்டும் என்ற முடிவுடன் நடுத்தெருவுக்கும் வந்தாச்சு. என்ன ஒரு கேவலம்? தமிழனை நம்ப ஒரு  தமிழனுக்கு  முடியவில்லை.  அல்லது தமிழனுடன் உறவாடுவது கேவலமானதா? ஒரு சாயா குடிக்க  நாயர் கடை வேண்டும். நாண் சாப்பிட ஒரு பஞ்சாபிக் கடை வேண்டும். துரித உணவு சாப்பிட  சீனாக் காரான் தேவை.  இன்னமும் ஏன் தமிழன் தேய்த்துக் கொண்டு இருக்கின்றான்? இரண்டு வார்த்தை ஆங்கிலத்தில் பேசினால் வரும் மதிப்பு அழகுத் தமிழில் பேசினால் வருமா? எங்காவது பிச்சைக்கார அல்ஜீரியாவில் இருந்து வந்திருந்தாலும் கிடைக்கும் மரியாதை அன்புத் தமிழனுக்கு கிடைக்குமா? எப்படித் தமிழன் இப்படி சொந்தப் பொண்டாட்டியையே வெள்ளைக்காரனுடன் படுக்க அனுப்பி வைக்கும் ஆசை வளர வைக்கப் பட்டான்.

நடுத்தெருவில் இருந்து சிந்திதேன். இந்த பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிச் செருப்புகளை நம்பினால் கோமணத்தினையும் உருவி விடுவார்கள். சீக்கிரம் குதிக்கால் பிடரியில் பட ஓடுடா என்று எனக்குள் இருந்த எச்சரிக்கை பொத்தான் எப்பவோ அலற ஆரம்பித்தாயிற்று.
ஆச்சுடா. இரண்டு வருடங்கள். காலை ஆட்டிக் கொண்டு வேலை செய்யலாமா? ஆட்டாமல் வேலை செய்யலாமா? என்பது தான் எனக்கு இப்பொழுது பெருங்கவலை.   அந்தப் புண்ணியவானுக்கு நன்றி சொல்லணும். இல்லாவிட்டால் நான் நன்றி மறந்தவனாவேன். அது சரி தமிழ்  நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று எந்த கேணப்பயல்( நான்) சொல்லுவான்.

நான் இன்று  இருக்கும் நாட்டிலும் வீடு தேடினோம்.  வீடு அமைஞ்சு முன் பணமும் கொடுத்தாச்சு. பக்கத்து வீட்டுக்காரன் தகராறு பண்ணினானாம். எப்படி இந்தியக் கழுதைகளுக்கு வீடு கொடுக்கலாம் என்று. அதுவும் தங்களின் வீட்டில் வயசுப் பொண்ணுங்க இருக்கும் போது.   அவனும் ஒரு இந்திய வம்சாவழி தான். அடடா வரலாறு திரும்புதடா. அது சரி எல்லோருமே பீக் குண்டியுடன் தானே திரிகிறார்கள்

August9, 2009

ரெக்கார்ட் டான்சும்- கை அரிப்பும்.

Filed under: அலட்டல் — pukalini @ 20:03

கல்லூரியில் சேர்ந்த மறு நாளே சுற்று வட்டாராத்தில் என்னென்ன விசேசம், பெருமைகள், புகழ்கள் என்று தேடி அலசி ஆராய்ந்து  நமது  தகவல் பெட்டகத்தை நிரப்பிக் கொண்டோம். முக்கியமானது முனியப்பன் கோவில் திருவிழா. திருவிழா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம். தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அந்தக் கோவிலை யாராவது அடையாளம் காட்டாமல் கண்டு பிடிப்பது அரிது. ஆனால் புகழ் பூத்துக் கிடந்தது. அதிலும் கலைவிழா,தொடரும் ரெக்கார்ட் டான்சும் பிரபல்யம்.  ஆட்டத்தின் உச்சக் கட்டத்தில் மகளிர்  அம்மணமாய் தரிசனம் கொடுப்பதுடன் கொடுக்கும் துணிமணிகளும் முக்கியமான இடங்களில் ஆலாதிக்கப் பட்டு திருப்பி வழங்கப் படும். சும்மாவா. அடுத்த திருவிழா எப்போது?

திடிரென்று ஒரு நாள் எங்களது உளவுத் துறை மூலம் கல்லூரிக்கு பின்னால் இருக்கும் ஒரு காட்டுக் கோவிலில் ஆட்டம் என்று தகவல் பெறப்பட்டது. தாக்குதலுக்கு ஏழு பேர் கொண்ட குழு தயாரானது. கூட்டுவதற்கு இருந்த தும்புத் தடியை உடைத்து  கொடியில் காய்ந்து கொண்டிருந்த் எவனோ ஒருவனின் பனியனை சுற்றி தீவட்டி தயாரிக்கப்ப் பட்டது. யாரோ ஒருத்தன் சாமிக்கு விளக்கேற்ற வைத்திருந்த இதயம் நல்லெண்ணெய் பைக்கெற்றுடன் காட்டுக்குள் ஊடுருவினோம். இரண்டு மணி நேர நடைக்குப் பின் கூத்தெல்லம் இல்லையாம் வெறும் பாட்டுத் தானென்ற ஏமாற்றத்துடன் தளம் திரும்பினோம்.

முதல் தாக்குதலே படு தோல்வி. சரியான புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்த கட்டம் முக்கியமானது. அடித்தால் ஒரே அடி. காத்திருந்தோம். தகவல் கிடைக்கப் பெற்று நடையாய் நடந்து களத்தை அடைந்தோம். அரை மணி நேரத்திலேயே மழை அடித்து ஊற்ற ஒரு வீட்டுக்குள் ஒதுங்கினோம். கழிசடையள் கூத்துப் பார்க்க வந்திட்டு  வீட்டுக்குள் ஒதுங்குதுகள். சனியனுகள் என்ன புத்தியோடு இருக்குதுகளோ என்று ஒரு பழம் புறுபுறுக்க வெளியே வந்தால் கொட்டும் மழையிலும் கூத்து சூடு பிடித்திருந்தது. இருந்தாலும் அடுத்த நாள் பரீட்சையை முன்னிட்டு சீக்கிரமாகவே தளம் திரும்பினோம்.

அடுத்தது செம அடி. படிப்படியாக எமது தாக்குதல் தளங்களும் விரிந்து சென்றன. இடையில் ஒரு சின்ன கொசுறு பக்கத்திலேயே கூத்தாம். இப்படித்தான் தூர இடத்தில் உற்றுப் பார்த்தால் காலுக்குள் பாம்பு புகுவது கூடத் தெரியாமல்ப் போய்விடும்.

போய் முன் வரிசையில் இடம் பிடித்து அகண்ட வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கையில், கல்லூரியின் கதாநாயகன் சிரித்துக் கொண்டே வந்தான். என்னடா சின்னப் பிள்ளைங்கள் மாதிரி இங்க வந்து உட்கார்ந்து கொண்டு என்னோட வாங்கடா என்று இழுத்துக் கொண்டு போனான்.

கல்லும் முள்ளும் கடந்து போனால் ஒரு ஒதுக்கு. கிடுகால் சுற்றி அடைக்கப் பட்டிருந்தது. உள்ளுக்குள் கனதியான வெளிச்சம். மெதுவாகக் கிட்டப் போய் கிடுகு நீக்கலுக்கால் எட்டிப் பார்த்தோம். ஆட்டக்காரிகள் அரையும் குறையுமாய் ஆடை மாற்றிக்  கொண்டிருந்தார்கள். அடிச்சது லக்குன்னு பார்த்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு சத்தம். எவண்டா அவன் ———————————————————-.

எடுத்தம் ஓட்டம். மூச்சிரைக்க ஓடி முன்னால் வந்து உட்கார்ந்தால் கதா நாயகன் சாவகாசமாக வந்த சேர்ந்தான். என்னடா நடந்ததென்று கேட்டோம். எவ்வளவு நேரம் தான் சும்மாவே பார்த்துக் கொண்டிருக்கிறது,அது தான் உள்ளுக்க கைய விட்டுட்டன். அடப்பாவி…………

August4, 2009

மகளுக்கு இந்தியா வேண்டாம்.

Filed under: கதை — pukalini @ 05:01

நேற்று ஒரு மாதிரி நினைத்ததை ஒப்பேற்றியாகிவிட்டேன். அதுவும் இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுவதே மிக்கக் கடினம். அதிலும் நாம் நினைத்ததை அவர்கள் சம்மதிக்குமாறு பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் எடுத்துச் சொல்லுவதென்றால் சும்மாவா? என் மகள் ரொம்பவே பிடிவாதக்காரி. என்னுடைய வளர்ப்பு விதம் அப்படி.

நான் மட்டும் இலேசுப் பட்டவனா? நாடறிந்த இலக்கியவாதி.சமுதாய அக்கறை கொண்ட சீர்திருத்தவாதி. எழுதியது என்னவோ பத்துக் கதைகள் தான். அத்தனையும் புரட்சியை தட்டி எழுப்பி இருக்கின்றனவே. முந்நாளில் சினிமாப் பகுதியில் கிசுகிசு எழுதியதும் கை கொடுத்தது. அங்கு தானே கற்பனை கடலெடுத்து ஓடும். எந்த நடிகர் கக்கா போனார், எந்த நடிகை குசு விட்டாள் என்று குழப்பிக், குழப்பி தம் பிடித்து எழுதியே  காலத்தை ஓட்டியவன். என்னிடமா? அதிலும் எந்தப் பள்ளி விழாவானாலும், கல்லூரிக் கலை நிகழ்ச்சியானாலும் காசு வாங்காமல்ப் போய் விளம்பரம் பார்த்தவனாச்சே.

என்ன செய்வது காசுக்கு ஆசைப் பட்டுஅந்தரத்தில் ஒருத்தியைக் கைப்பிடித்தேன். அவளும் ஒரு பிள்ளையை பெற்ற பின் தலை மறைவாகிவிட்டாள்.  வேறு என்ன தான் செய்வாள்? குடியும், கும்மாளமுமாய் இருந்தால் பரவாயில்லை. கூத்தியாளையும் சேர்த்துக் கொண்டது தான் வினையாகி விட்டது. பெற்ற பிள்ளையையும் மறந்து போய் விட்டாள்.

அதை என்ன செய்வது என்று கடனுக்கு வளர்க்கத் தொடங்கி இன்று வினையாகி நிற்கின்றது.  மறுமணம் வேண்டாமென்று நல்லவனுக்கு நடித்து கரை கண்டாலும் என் நற்பெயரைக் காப்பாற்ற மகளை செப்பம் செய்ய வேண்டிற்று. அவளோ எனக்கு மேல். படிப்பும் கட்டை. எப்படியோ அடித்துப் பிடித்து காசைக் கொட்டிக் கரியாக்கி டாக்டராக்கியாச்சு. இனியும் அவளை என் கூட வைத்திருக்க முடியுமா? கலியாணம் செய்து வைக்க வேண்டும்.அதுவும் ஒரு நாமம் போட்டவன் வேண்டுமே?

என்னிடம் கைவசம் நல்ல மாப்பிள்ளைகள் இருக்கிறார்கள். எல்லோரும் எனது வாசகர்கள். எனது சிந்தனையில் கவரப் பட்டவர்கள். எவனாவது ஒருத்தனை கை காட்டிக் கட்டச் சொல்ல வேண்டியது தான். அதிலும் வெளிநாட்டு மாப்பிள்ளைதான் நல்லது. எனது கடைசிக் காலத்தில் எங்காவது ஒரு நாட்டில் காலை நீட்டி நிமிர்த்தி உட்கார்ந்து வெளிநாட்டுக் கதை எழுதலாம்.

அதுக்கு என் மகள் சரிப்பட வேண்டுமே? படித்திருக்கிறாளாம். டாக்டராம். ஊரில வேலை செய்ய வேண்டுமாம். அவளின் வண்டவாளம், தண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும் தானே. அவள் எல்லாவற்றிலும் என்னை மிஞ்சியவள். 16 வயதிலேயே ஓடிப் போயிட்டு சலிச்சுப் போய் திரும்பி வந்தவள். நான் ஏதோ பிரபலம் எனபதாலும் கையில் கொஞ்சம் காசு இருந்ததாலும் கண்டவனிடமும் காலில் விழுந்து தான் அவளுக்கு மருத்துவக் கல்லூரி அனுமதி வாங்கிக் கொடுத்தேன். இப்பொழுது  டாக்டராம். சும்மா சொல்லக் கூடாது என் மகளுக்கு நல்லாவே நடிக்க வருது. வேறு என்னவாம் இந்தியா தானே இழிச்ச வாயன்கள் நிறைய இருக்கும் இடம். மருந்தை தப்பாக் கொடுத்து எவனாவது செத்துத் தொலைந்தாலும் கேள்வி இல்லை. வெளிநாடுகளில் சும்மா விட்டிருவாங்களா? நான் வெளிநாடு என்று சொல்லுவது அமெரிக்காவைத் தான்.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் என்ன உத்தம சீலர்களா? நாட்டுக்கு வரும் போது மட்டும் தெளிவாகுவது. விட்டால் முக்காடு போட்டுக் கொண்டு ஒதுங்குவது. படிக்கும் வரைக்கும் இந்தியா வேண்டும். முடிச்சப் பிறகு குப்பை, தூசி. மூத்திர வாசம். பிச்சைக் காரர்கள். என்ன செய்வது?அவர்களாவது சொர்க்கத்தை அனுபவிக்கட்டுமே. அப்புறம் ஆறு இலக்கத்தில் சம்பளம் போட்டு வலை வீசி பெண்டு பிடிக்கிறது. கூட்டிக் கொண்டுபோய் அங்கு வைத்திருக்கிறவளுக்கு துடைக்கச் சொல்லுறது. இல்லாவிட்டால் மாமா வேலை பார்க்கிறது.

ஒரு மாதிரி மகளை சம்மதிக்கச் செய்தாகி விட்டது. அவளும் அமெரிக்கா போய்விடுவாள். எனக்கும் கடைசிக் காலம் அமெரிக்காவில்.  எழுத்தாளனாக இருந்து சேர்த்த காசு அமெரிக்கா போக உதவுது. தமிழ் நாட்டு மண்ணாங் கட்டிகளுக்கு ஒரு அறுப்பும் தெரியாது. அடுத்த முற்போக்கு, பிற்போக்கு அல்லது ஒரு புறம்போக்கோ வயிற்றுப் போக்கு இலக்கியவாதி வருவான். இதுகளும் பல்லைக் காட்டுங்கள். விடுங்கள். அது சரி நான் என்ன எழுதுறன் என்று என்  மகளுக்குத் தெரியுமா? என்ன கேள்வி அவளுக்கு தமிழே தெரியாதே?

அம்மாடி ஒரு வழி பண்ணி மகளை அனுப்பியாச்சு. இனியாவது ஒரு நாளைக்கு ஒரு விசிறியா வீட்டிலேயே வீச வேண்டியது தான். எத்தனை நாளைக்குத் தான் கதை எழுதுறன்,கதை எழுதுறன் என்று ஊட்டி, ஏற்காடு போகிறது. கட்டிய வீட்டிலேயே கலகம் பண்ணலாம். இப்பவாவது புரிந்திருக்குமே மகளுக்கு ஏன் இந்தியா வேண்டாமென்று.

August2, 2009

லண்டனுக்கு வாங்கோ……

Filed under: கதை — pukalini @ 21:23

லண்டனுக்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகி இருக்கிறது. அதற்குள்ளாகவே வாழ்க்கை இப்படி நாறடித்து விட்டது. எனக்கென்ன வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் வயசா? இந்த ஆவணியில் 25 ஆகுது. இந்த வயதுக்குள்ளேயே அடுத்த கட்டம் என்ன என்று தெரியாமல் தடுமாறத் தொடங்கி விட்டது.

வீட்டில் மூத்த பெண் பிள்ளை. அதனால் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே வளர்த்து விட்டார்கள். பின்னால் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாம்.எனக்கு இப்பொழுது கை காட்ட யாருமில்லை. கொஞ்சம் அழகாக இருந்து தொலைந்து விட்டேனா, ஆக்கினையின் ஆரம்பம். அழகென்றால் அப்பிடி இப்பிடி நயன்தாரா அளவில் இல்லை. சும்மா மா நிறம் தான். நம் மக்களுக்கு நிறத்தில தான் அழகு இருக்கென்று ஒரு நினைப்பு. கேவலம் மைக்கேல் ஜாக்சனே கறுப்பு பிடிக்காமல் அடாவடி பண்ணி இருக்கும் போது, வெள்ளை தான் சொர்க்கத்தின் நிறம் என்று நினைத்திருக்கும் கேடு கெட்ட தமிழ் மகா சனங்களுக்கு என்ன இழவு புரிந்திருக்கப் போகுது.

பள்ளிக்குப் போனாலும் கரைச்சல். கல்லூரிக்குப் போனாலும் இடைஞ்சல். எல்லாம் என் நிறம் பண்ணிய பாடு. ஆடு, மாடுகளுக்கு இந்த நிறம் தெரியவில்லையே? பாழாய்ப் போன மனிதர்களுக்குத் தான் இந்த நிறக்குருடா? அதிலும் வேசிகளின் கூடாரமாகி விட்ட தமிழ் நெஞ்சங்களுக்கு வேறு என்ன தான் புரியும். பரவை முனியம்மா போட்டுக் குளிக்கும் சவர்க்காரத்துக்கு இந்திக்காரி விளம்பரம். பச்சை மண்ணைக் காட்டக் கூட ஒரு வெள்ளைத் தோல் தேவை. பார்த்துப் பார்த்து வளர்ந்த சனங்களுக்கு மண்டைக்குள் என்ன ஊறி இருக்கும்?

ஆனாலும் எனக்கு எடுப்பும், கொழுப்பும் கொஞ்சம் கூடத்தான். பின்னே, நாய்க் கூட்டம் எதுக்கு அலையுதோ அது என்னிடம் இருக்குதே? போதாதற்கு இளமை வனப்பும், வாலிப மிடுக்கும் சேர்ந்தால் சொல்ல வேண்டுமா? சில, பல பன்னிக் கூட்டங்கள் முன்னுக்கும், பின்னுக்கும் பகடை உருட்டிக் கொண்டு திரிந்தாலும் நான் என்ன தருமனா ஏமாற? எனக்கு என் பெறுமதி தெரிந்திருந்தது. சும்மா வீணாய்ப் போகலாமா? மிஞ்சிப் போனால் டேய் இந்த பிகருடன் சாப்பிட்டனடா என்று சொல்லும் ஆணழகர்கள் இருந்த வரைக்கும் கல்லூரியில் தண்டச் செலவு வைத்ததில்லை.

ஐந்து வருடங்கள் முதுகலை படித்து முடிக்கும் வரைக்கும் நடந்தேறிய நாட்குறிப்புகளை எடுத்து விட்டால் நாட்டு நடப்பு நாறி விடும். என் பிள்ளை தங்கக் கம்பி, செப்புக் கோல் என்று பீற்றித் திரியும் அம்மாமார்கள் எல்லோரும் வாய்களை பினாயில் போட்டு தேய்க்க வேண்டும். ஆண் சிங்கங்கள் எல்லோரும் காதல் மன்னர்கள் இல்லையோ, மன்மதக் குஞ்சுகள் என்று நினைப்பு.

எனக்கு வெளி நாடு போக வேண்டும் என்று ஒரு நினைப்பு. அதுவும் லண்டனுக்கு. அமெரிக்காவில் தான் நம்ம ஊர் பன்னாடைகள் பன்னி மேய்க்குதுகளே? அதுக்கு என்ன வழி? என்னிடம் உள்ளது என்ன? பொறுத்தார் பூமி ஆழ்வார். மாப்பிள்ளை தேடும் போது சொல்லியாச்சு. எனக்கு லண்டன் மாப்பிள்ளை தான். இருந்தாலும் கொஞ்சம் சங்கடப் பட்டுத் தான் போனேன். இரண்டு வருடங்களாயிற்று ஒரு இழிச்ச வாயன் மாட்டுவதற்கு.

லண்டன் மாப்பிள்ளை அல்லவா. லண்டனிலேயே பெரிய கடை இருக்காம். வைத்திருக்கும் கார் மட்டும் ஒரு கோடியாம். பங்களா தான் வீடாம். என்ன அவரு படிச்சது வெறும் பத்தாம். அதுக்கென்ன இவ்வளவு தொழில் பண்ணுறவருக்கு படிப்பு என்னத்துக்கு? ஒரு மாதிரி அடம் பிடித்து அடிச்சு பிடிச்சு கலியாணம் பண்ணி லண்டனுக்கும் வந்தாச்சு.

அப்பாடி இவரு சுத்த மோசம், நான் வந்தது லண்டன் பார்க்க. ஒரு கோடியில கார் இருந்தாலும் வெளியே போனாத் தானே அது கார். இவருக்கு தொழில் முக்கியம். வயசு அப்படி. பத்து வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்தது ரொம்பத் தப்போ? லண்டன் மாப்பிள்ளை என்று தொப்பையையும், சொட்டையையும் அசட்டை செய்தது தப்போ? இளம் மனைவி, அதுவும் இருபத்தைந்து வயதில் காய்ந்து கிடக்கின்றது அந்த அரைக் கிழத்துக்கு புரியாதோ?

அப்பவே சொன்னார்கள். காசுக்காரன். 35 வயது. லண்டனில இருக்கிறான். எல்லாம் ஆடி முடிச்சிட்டு ஒரு பிள்ளை பெறும் மிசினை வாங்கிக் கொண்டு போகப் போறானென்று. அது தான் நடக்குதோ? நடக்கப் போகுதோ? ஒரு சினிமா, கடை தெரு என்று எங்காவது போக முடிகின்றதா? ஏன் வெளியே காற்று வாங்கத் தான் போய் வர இயலுதா? மரக் கட்டை. ஜடம். இதுகள் எல்லாம் எதுக்கு கலியாணம் கண்ணறாவிகளைப் பண்ணித் தொலைக்குதுங்கள்?

இங்க வெள்ளைத் தோலுக்கு மதிப்பும் இல்லை. ஏதோ பிச்சைக்காரி மாதிரி பார்வை. புருசனும் வீண். எனக்காக உயிரையும் தருவேன். சொர்க்கத்தையும் உள்ளங் கையில் ஏந்துவேன். மகாராணிக்கு இதயத்தினை கிழித்து அபிசேகம் செய்வேன் என்று புலம்பித் திரிந்தவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக கனவில் வருகிறார்கள்.

July18, 2009

நான்-ஒரு கொலையின் சாட்சி.

Filed under: கதை — pukalini @ 18:27

தீபாவளிக் கூட்டம். எங்கும் கச கச என்று ஒரே மக்கள் திரள். அங்கு, இங்கு அசையவே முடியவில்லை.இன்னும் அரை மணி நேரம் தாமதமாகத் தான் நாகர்கோவில் போகும் பயணிகள் புகைவண்டி வந்து சேரும். அதற்கிடையில் இங்கு இருந்தால் மூச்சுத் திணறிச் செத்து விடுவார்கள். இந்த சமுத்திரத்துக்குள் முத்துக் குளிப்பது போலத் தான் உள்ளே ஏறுவதும், ஆக மிஞ்சிப் போனால் ஒற்றைக் காலில் நிற்பதும்.

நினைத்த மாதிரியே மேலும் அரை மணி நேரம் தாமதமாக வண்டி ஆடி அசைந்து வந்தது. வரும் போதே தெரிந்தது மக்கள் தொங்கிக் கொண்டு வருவது. ஏற்கனவே தாமதம். பணம் கட்டி சீட்டுக்களையும் வாங்கியாகி விட்டது. இந்த நெரிசலுக்குள் அடம்பிடித்து ஏறி எங்களது பிரயாணத்தை உறுதிப் படுத்தாவிட்டால் அப்புறம் என்ன வாலிப முறுக்கு. நானோ எமன் மாதிரி கையில் பையுடன் நிற்கிறேன். என்னுடன் கூட வந்த நண்பனோ எமகாதன் மாதிரி என்னிலும் இருமடங்கு அளவில் வண்டியையே இழுத்து நிறுத்துவது போல் நிற்கிறான்.

ஒரு மாதிரி அடம்பிடித்து உள்ளே கால் வைத்து ஏறியாகி விட்டது. கையில் உள்ள பையையே கீழே வைக்க இடமில்லை. நிற்பதற்குக் கூட இடமில்லை.  வாசனை அடித்து நொருக்கும் கழிப்பறைக்கு முன் ஒற்றைக் காலில் நிற்பதற்குத் தான் இடம் கிடைத்தது. பலத்த சத்தம். அனேகமானோர் திருப்பூரில் இருந்து ஊருக்குப் போபவர்கள். கழிப்பறை செல்லும் வழி முழுவதையும் அடைத்து நானும் எனது நண்பனும் நின்றவாறே பயணத்தைத் தொடங்கினோம்.

உள்ளே கண்ணுக்கு எட்டும் தொலைவில் இரண்டு இளம் பெண்கள், பொருட்கள் வைக்கும் பலகையில் பொருட்களுக்கு மேல் நன்றாக காலை விரித்துப் போட்டுக் கொண்டு இருந்தார்கள். கீழே கவனிக்கத் தக்கவாறு ஒரு பழங்கிழம். நெற்றி முழுவதும் திருநீற்றுப் பட்டை. அவருக்கு முன்னால் வாளிப்பான ஒரு பெண். சிறுமிக்கு அதிகம். பெண்ணுக்கு குறைவு.
எங்களது பக்கம் ஒரு வாயில் படியில் இரு சிறுவர்கள். ஒருத்தனுக்கு வயது 15 இருக்கும். அடுத்தவனுக்கு 13 வரும். அண்ணன் தம்பியாம். இன்னும் பலர். முக்கியமாக ஒருத்தன். வயது நாற்பதுக்கு பக்கம் இருக்கும். நெடு நெடு என்று வளர்ந்திருந்தான். தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இடம் பக்கம் வகிர்ந்து சீவி விட்டிருந்தான். வாயிலிருந்து பீடி நாத்தம் கப கப என்று வந்து கொண்டிருந்தது.

வண்டி அசைய ஆரம்பித்தது. என் நண்பன் முன்னால் காலை விரித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு வலை வீசிக் கொண்டிருந்தான். போட்டியாக அந்த முக்கியமானவன். எனக்கு வாய்த்தது கழிப்பறை வாசம் தான். எப்படியும் நண்பன் அந்த இரண்டுக்கும் அருகில்  போய் விடுவான். நான் நிற்பதற்காவது கொஞ்ச இடம் கிடைக்கும்.

பக்கத்திலிருந்த இரண்டு சிறுவர்களும் கலாட்டா பண்ண ஆரம்பித்தார்கள். வண்டியில் நான் இருந்த பெட்டி முழுவது ஒரே கசமுசா. திருப்பூரிலிருந்தே இப்படித் தான் ஆட்டம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் வயதுக்கு அதிகம் தான். பெரியவன் படியில் கம்பியைப் பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பித்தான். வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், வசனங்களும் காது கொடுத்து  கேட்கிற மாதிரி இல்லை. இந்த வயதுக்குள் இப்படியா? திருப்பூரின் வளர்ச்சியோ?எல்லோரும் அவனுக்கு புத்திமதி சொல்ல கிளம்பினார்கள்.ம்ம்ம். ஒரு அசுமாத்தத்தினையும் காணோம்.

கையில் பீடியை எடுத்து பற்றினான். எல்லோர் மூஞ்சியிலும் புகை விட்டான். தம்பிக்காரன் அது மட்டும் பண்ணவில்லை.எல்லோர் திட்டும் சேர்ந்து கொண்டது. போதாதற்கு படிக் கம்பியினைப் பிடித்துத் தொங்கி பெட்டிக்குள் இருந்த இளம் பெண்ணின் மீதும் எட்டி, எட்டி புகை அடித்தான். கிழம் கிளம்பியது. நெற்றியைச் சுருக்கி திருநீறு முகத்தின் மீது விழ திட்டியது. அந்தச் சின்னப் பெண் அவரின் மகளோ, பேத்தியோ? பொடியா உள்ள வா. என்ன தான் அநியாயம் செய்தாலும் பரவாயில்லை. கம்பியில் தொங்காத. என் வயதுக்காவது மரியாதை தா. நான் எத்தனையோ விபத்துக்களை பார்த்திருக்கேன். கம்பியைப் பிடித்து ஆடாத. கவனம்.

தேறவில்லை. ஆகவும் அட்டகாசம் தாங்கவில்லை. நண்பனும் நல்லவனுக்கு நடித்து பொருட்கள் வைக்கும் பலகையில் இடம் பிடித்துக் கொண்டான். முன்னுக்கு நின்ற முக்கியமானவனும் அந்த இருவருக்கும் பாடம் புகட்டப் போறதாகச் சொல்லிக் கொண்டு வாயில்ப் படிக்குள் போய் விட்டான். நானும் மெதுவாக நகர்ந்து பெட்டிக்குள் புகுந்து கொண்டேன்.கொடுமுடி கடந்த பின் திடீரென்று ஒரு நிசப்தம். வண்டிச் சத்தம் மட்டும் கேட்டது. மெது மெதுவாக தகவல் கசிந்தது.அந்த அட்டகாசப் பெரியவன் ஓடுகின்ற வண்டியில் இருந்தே கீழே விழுந்திட்டானாம். ஒருத்தரும் ஒன்றும் பேசாமல் இருந்தனர். யார்மே கவலைப் படவில்லை.கிழம் மட்டும் இப்படித்தான் அங்கேயும் நடந்தது என்று பழங்கதை கூறிக் கொண்டு வந்தது.

எனக்கு என்ன் நடந்ததென்று புரிந்து விட்டது. நடந்தது மிகவும் நல்லது. அவன் இப்பவே இப்படி என்றால் பின்னாளில்? நான் ஒன்று செய்ய நினைத்தேன். அது யார் மூலமாகவோ நடந்து விட்டது. ஆக மொத்தம் காரியம் நல்லது. நடத்தியவன் நல்லவனா? கெட்டவனா? அது நமக்கு முக்கியம் இல்லையே? வண்டி ஓடும் வேகத்துக்கு தப்புவது கடினம். அதுவும் சில்லுக்குள் அகப்பட்டால் சவப் பெட்டிச் செலவும் மிச்சம்.

வண்டி மதுரைக்குள் ஆடி அசைந்து நுழைந்தது. ஒரு கொலையின் தடங்களை மறைத்துக் கொண்டு கீச்சிட்டுக் கொண்டு நின்றது. மக்களும் அடித்துப் பிடித்து உள்ளே ஏறினார்கள். நானும் நண்பனும் இறங்கி நடந்தோம். அந்த முக்கியமானவனும் முன்னுக்குப் போய்க் கொண்டிருந்தான். டேய், அவன் தானா விழவில்லையடா. இவன் தான் தள்ளி விட்டிட்டான். நண்பனுக்கு வியர்த்தது. எப்படித் தெரியும்? எனக்கு நிச்சயமாத் தெரியும். இப்ப இன்ன செய்யலாம். விட்டுத் தொலை. நமக்கேன் வீண் வம்பு. சனியன் தொலைந்தது.

கவனமாக அவனுக்குப் பின்னாலேயே போனோம். முன்னுக்குப் போன பெண் அவனைப் பார்த்துச் சிரித்தாள். நெருங்கிப் பார்த்ததில் அவன் அவளை உரசுவது அப்பட்டமாகத் தெரிந்தது. நண்பன் என்னை உற்றுப் பார்த்தான். நான் அவனை நெருங்கினேன்.

July11, 2009

என்னைக் காதலித்தவனுக்கு ஒரு மடல்,

Filed under: கதை — pukalini @ 19:35

என்றும் என்  இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அருமை நண்பா,

இன்று உனக்கு மண நாள். பலதும் பெற்று நல்வாழ்வு  வாழ எனது வாழ்த்துகள். இருந்த போதிலும் உனது திருமண விழாவிற்கு வர இயலவில்லை. அழையா விருந்தாளியாக வருவதற்கும் எனது மனம் இடங் கொடுக்கவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக நமது  நட்பு  நன்றாகத் தானே இருந்தது. ஆண்-பெண் நட்பு எப்படியும் ஒரு ஒரு நாளைக்கு கேள்விக் குறியாகும் என்று எல்லோரும் சொல்லும் போது நான் மட்டும் அதை நம்பவில்லை. நமது நட்பு ஆழமானது. எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று நினைத்திருந்தேன்.

உன்னை எப்பொழுதுமே நண்பன் என்ற தரத்திற்கு மேல் என்னால் உயர்த்த முடியவில்லை. நீ முஸ்லிமாக இருந்த போதும் எனக்காக கோயிலுக்கு வந்த போது பெருமைப் பட்டேன். பரீட்சை சமயங்களில்  எனது எழுத்து வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்யும் போது சந்தோசமடைந்தேன்.

எப்பொழுதுமே உன்னை உயர்ந்தவனாகவே காட்டிக்  கொண்டாய். நானும் ஏமாந்தேன். என்னில் அக்கறை உள்ளவனாக இருந்தாய். நானும் நம்பினேன். அந்த அக்கறை ஏன் என்று புரிந்த போது அருவருப்பாக இருந்தது.

உன்னை ஒருத்தி காதலிக்கும் போது வேண்டாம் என்று ஒதுக்கினாய். எனக்காக என்றாய். ஏனென்றால் நமது நட்பை சந்தேகிப்பதாகச் சொன்னாய். எனக்கு பெருமை பிடிபடவில்லை. இப்படி ஒரு நண்பனா என்று.

எப்பொழுதும் நீ ஒரே கண்ணோட்டத்தில் தான் என்னிடம் பழகி வந்திருக்கிறாய். அந்தச் சனியனையாவது முதலில் சொல்லித் தொலைத்திருக்கலாம் தானே? எதற்கு மூடி மறைத்தாய்? பயமா? நம்பிக்கை இன்மையா?

நான் இன்னுமொருவனைக் காதலிப்பதாகச் சொன்னதும் ஏன் துள்ளிக் குதித்தாய்?  உனக்குத் தான் முன்னுரிமை தர வேண்டும் என்று அடம் பிடித்தாய். எனது உணர்வுகள் உனக்கு புடலங்காயாய்ப் போய்விட்டனவா? அன்றிலிருந்து உனது கணக்கு தீர்க்கப்பட்டு விட்டது தானே?

அதற்குப் பிறகும் நீ சும்மாவா இருந்தாய் எனது காதலைப் பற்றி இல்லாத பொல்லாப்புகளை சொல்லிக் கொண்டு திரிந்தாய். ஆண்டவனுக்கு நன்றி. உன்னை அடையாளம் காட்டியதற்கு.

இப்பொழுது உனக்கு கலியாணமாம். பெண் உன்னைக் காதலித்தவளாம். மதம் மாற ஒப்புக் கொண்டபடியால் நீயும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாயாம். உனக்கு இது ஒரு செட்டில்மென்ற். அவளுக்கு கருமாதி.

உனக்காக நான் எப்போதும் கலங்குவதுண்டு. எப்பொழுது நீயும் கீழ்த்தரமாக சிந்திக்கத் தலைப்பட்டாயோ அப்பொழுதே நீயும் செத்து விட்டாய்.  உன்னை உத்தமனாக எண்ணியதற்கு என்னைத் தான் நொந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது நினைத்தாலும் உன்னுடன் பகிர்ந்து கொண்ட தருணங்கள்  விரக்தியடைய வைக்கின்றன. எனக்கு மாதவிடாய் வெளியே போக முடியவில்லை என்பதைக் கூட உன்னுடன் சொல்லிக் கொண்டேனே? நீ எப்படி அசிங்கமாய் நினைத்தாயோ? சுடிதார்  சால்வை காற்றில் பறப்பது கூட எனக்கு அக்கறையைக் கூட்டவில்லை உன்னுடன் இருக்கும் போது. ஆனால் நீ கண்டிப்பாய் எப்படி உணர்ந்திருப்பாய் என்று இப்பொழுது நான்  நொந்து கொள்கின்றேன்.

உன்னை நினைத்துக் கவலைப் படாமல் இருக்கச் செய்ததற்கு எனது நன்றிகள்.

வாழ்க வளமுடன்,

…………

July9, 2009

தம்பியான வில்லன்.

Filed under: வகுப்பு — pukalini @ 20:19

ஒரு மாதமாக வகுப்புக்கு போறதும் வாறதுமாகவே இருக்கு. உருப்படியாக நடந்தது எதுவும் இல்லை. வகுப்பில் என்னிலும் வயது குறைந்த குழந்தைகள். கல்லூரிப் படிப்பு சப்பென்று போய் விடுமோ என்று மனசுக்குள் ஒரே அங்கலாய்ப்பு. பார்க்கத் தகுந்தவாறு ஒரு பெண் கூட இல்லை. அதாவது எனக்கு தோதாதன மாதிரி. மாணவப் பெண்கள் எல்லோருமே இன்னமும் பக்குவப் படவில்லை.  காலையில் வகுப்புக்கு வந்தமா, காலைத் தூக்கி கதிரைக்கு மேலே போட்டமா, தயிர் சாதத்தை  புளிச்சுப் போன  மாங்காய் ஊறுகாயுடன் நக்கித் தின்றமா,வகுப்பில் நல்லாத் தூங்கினமா என்றே பொழுதைப் போக்காட்டிக் கொண்டிருந்தார்கள்.

பசங்க இன்னமும் படு மோசம். ஒழுங்காக் குளிக்கக் கூட அக்கறை இல்லை. வகுப்புக்கு வந்தாலும் ஏதாவது சினிமா நடிகையின் படத்தை ஒளித்து ஒளித்துப் பார்ப்பதற்கே காலங் கடந்து விடும்.  சின்னப் பொடிசுகள்.இதற்கிடையில் அண்ணா, அண்ணா என்று அன்புத் தொல்லை. எப்படி சகசமாய்ப் பழகுவது.என்ன செய்வது இந்த வயதில் படிக்க வந்தது யார் குற்றம்?

இன்றைக்கு வகுப்பு நடத்த புதுசா ஒருத்தி வாறதென்ற பேச்சு. வாறதாவது கொஞ்சம் குளிர்ச்சியாய் இருக்க வேண்டுமென்ற வேண்டுதலோடு ஒன்றுக்கு இரு தடவையாக சவர்க்காரத்தை போட்டுத் தேய்த்து கிளம்பினேன். ஆண்டவா, அப்படி ஒருத்தன்  இருந்தானென்றால் உனக்கு ரொம்ப நன்றிப்பா. வந்தவளாவது அம்சமா இருக்காளே? இனிமேல் கண்டிப்பா பாடம் நடத்துறதைக் உன்னிப்பாகக் கவனிப்பேன்.

ஒரு மாதம் கடுகாய் கரைந்து போக, கனவுலோகக் காதலும்  அத்திவாரம் போட்டு  மெல்ல, மெல்ல மேலெழும்பிக் கொண்டிருந்தது. பசங்க, பொண்ணுங்களும் பரவாயில்லை. நானும் வயது வித்தியாசம் பாராது பழகியதால் அவர்களும் கொஞ்சம், கொஞ்சமாக பயத்தை விட்டு பழக ஆரம்பித்தார்கள்.

இன்று மாலை கடைசி வகுப்பு. நம்மாளின் மாதிரிப் பரீட்சையாம். எல்லோருமே ஒரு மாதிரியாய்  ஆளையாள் பார்த்துப் பார்த்து எழுத நமக்கு கோபம் பொத்துக் கொண்டு வெளியேறி கரை தட்டியது. டேய் எல்லோருமே ஒழுங்காப் படிச்சு எழுதுங்கடா. அப்புறம் நீங்க கோட்டை விட்டு நம்மாளு மனசு சங்கடப் படுவதை என்னால் பொறுக்க முடியாது கண்ணுங்களா, என்று ஒரு சத்தம் போட்டு வைத்தேன்.

இதற்காகவே காத்திருந்தவன் போல் வில்லன் கிளம்பினான். நானும் வழமை போல் சீக்கிரமே முடித்து விட்டு அவசரமாய் கிளம்பினேன். நமக்குத் தான் எப்பொழுதுமே சினிமாவும், தண்ணிப் பார்ட்டியும் வெளியே காத்திருக்கே?

அடுத்த நாள் காலையில் விடயம் ஊதிப் பெருக, வகுப்பில் எல்லோருமே என்னிடம் வந்து  நடந்தது என்ன என்று தெளியப் படுத்தி கவலைப் படுத்தினார்கள். முதல் வகுப்பு நம்மாளு உள்ளே வந்தா, வந்து என்னிடம் நேராக இனிமேல் இப்படி பண்ண வேண்டாம். நல்லது இல்லை, என்று புத்திமதி வேறு. அம்மாடி உனக்கு என்னிலும் இரண்டு வயது கம்மிம்மா, எனக்கே நீ அறிவுரை சொல்லுறியே என் உணர்ச்சிகளை  நீயாவது கொஞ்சம் புரிந்து கொள்ளனம்மா என்று மனசுக்குள் கேட்டுக் கொள்ள, அவவுக்கு அது கேட்டிருக்கும் போல முகத்தில் ஒரு வித  நாணம் படர நகர்ந்து விட்டாள்.

அதுக்கப்புறம் என்ன ஒரே கலாட்டா தான்.

வில்லன் – ஒரு நாள் அவனைத் தனியே கூட்டிப் போய் நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்து எனது நன்றியை வெளிப்படுத்தினேன். ஒன்று வகுப்பில் என்னுடன் கூட இருந்தவர்களை அடையாளம் காட்டியதற்கு, இரண்டாவது எனது காதலுக்கு  தூது போனதற்கு.

July4, 2009

பெண்ணே உன் நாணமெங்கே?

Filed under: கதை — pukalini @ 17:16

கடைக்குப் போய் நெடு நாட்களாகி விட்டது.இன்று திடீர் சமையலுக்கு ஏற்பாடாகி இருந்தது. ஏதாவது வாங்கினால் தேவலை என்று அங்காடிக்குப் போனேன். எப்பொழுதும் தனிமையாய்ப் போவதில் அனுகூலம் இருக்கத் தான் செய்யும்.

கையில் கூடையுடன் எதையோ தேடிக் கொண்டிருந்த எனக்கு கண்ணில் மின்னல் தட்டியது. நான் நடந்து கொண்டிருந்த பாதையில் ஒரு பெண் சாவகாசமாக இருந்து எதையோ கொறித்துக் கொண்டிருந்தாள். கிட்டவாகப் போனேன். அழகென்றால் அது தான் அழகு. அப்படியே மனதைப் பறிகொடுத்து பரவசமாகி நின்றேன்.

அவளோ தன்னை ஒரு ஆண் மகன் உற்றுப் பார்க்கிறான் என்ற கவலையோ, பயமோ கொஞ்சம் கூட இல்லாமல்  தன் வேலையில் கவனமாக இருந்தாள். முழங்காலில் இருந்து,ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டு, முன்பக்கமாக பெட்டியின் மீது சாய்ந்து எதனையோ மும்முரமாகச் சாப்பிட்டிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே போட்டிருந்த குட்டைச் சட்டை பின் பக்கத்தல் மேலெழும்பி ஒரு மாதிரி இருந்தது. எனக்கு அதைப் பார்க்கக் கூட கூச்சமாயிருந்தது.

எப்படி ஒரு பெண்ணின் அழகை அவளுக்கே தெரியாமல் ரசிப்பது. அவளோ ஒரு எருமை மாடு தன்னை வெறிப்பது தெரியாமல் தன் வேலை தானுண்டு என்று இருக்கிறாள். என்னாலும் அவ்விடத்தினை விட்டகல முடியவில்லை. அவளை அப்படியே வாரி அணைக்க வேண்டும் என்று மனசு அங்கலாய்ந்து கொண்டிருந்தது.

திடீரென்று வில்லி அவளின் அம்மா உருவில் வந்தாள். மாமா போக வேண்டும் வழியை விடு என்று சொன்னது தான் தாமதம். ( நான் கேட்டனா?)மான் குட்டி போல துள்ளி எழும்பி சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் கபடமற்ற சிரிப்பில் அப்படியே இதயம் வெளியே துடித்து விழுந்தது. பாழாய்ப் போன உலகம் இரண்டு வயதுக் குழந்தையைத் தொட்டாக் கூட தப்பாக நினைக்கும். திட்டியவாறு வெளியேறினேன்.

சாயாத கொம்பிருந்தும்  தலை நிமிர்ந்து பாயாத மான். இப்படி ஒரு வசனம் அடிக்கடி தட்டுப் படும். எல்லாமிருந்தும் ஒரு  குழந்தை பெற்றுக் கொள்ள வழியில்லையே?

June26, 2009

உனக்கெல்லாம்….

Filed under: அலட்டல் — pukalini @ 21:03

ஏற்கனவே நேரமாச்சுது. இப்படித் தான் இவங்கள் எப்பொழுதும். மூட்டை கட்டிட்டு கிளம்புற நேரத்தில தான் எதையாவது சொல்லிக் கடுப்பேத்துவாங்கள். இன்னிக்கு வெள்ளிக் கிழமை. நேரத்தோட போனாத் தான் எங்கேயாவது ஒரு கோயில்ல சாப்பாடு கிடைக்கும். நாசமாப் போவானுகள். வெளிக்கிடுற நேரமாப் பாத்து கத்தியை வச்சிட்டாங்கள்.

எப்படியோ முட்டி, மோதி அலுவலை முடித்து வெளிக்கிட்டாச்சு. ஆக மொத்தம் 10 நிமிசம் தான் பிந்திப் போயிருக்கு. அடப் பாவமே எதுக்குடா இப்பிடித் தலையால தெறிக்கிற? ஆறுதலாத் தான் பண்ணி முடிக்கலாமே? அடிச்சுப் பிடிச்சு பேருந்துக்க இடம் பிடிக்க ஓடி மேல் மாடியில் இருந்தாச்சு. இது போய்ச் சேர எவ்வளவு நேரமாகுமோ? கட்டையில போவானுகள், சந்திக்குக் சந்தி வெளிச்சம் போட்டு நிப்பாட்டிருவாங்கள். கருமாந்திரம் பிடிச்சவனுகள்.

இரண்டாவது நிறுத்தத்தில் பேருந்து நின்று கிளம்பியது. 6 வயதில ஒரு பொண்ணு எட்டி, எட்டி மேலே வந்தது. பின்னால் ஒரு 3 வயதில் ஒரு பெண் குழந்தை ஊர்ந்து, ஊர்ந்து ஏறியது. அதுக்கும் பின்னாடி ஒரு அம்மாவும் ஒரு கிழவனும் ஏறி இருந்திட்டாங்கள்.  மூன்று பெண்களுமே மூடி முக்காடு போட்டிருந்தார்கள். அம்மாவுக்கு ஒரு 25 வயசு போடலாம். கிழம் ஒரு காலை பெட்டியில் வச்சிட்டு தான் கிளம்பியிருக்கும் போல.

பக்கத்தில தான் கிழம் உக்காந்திருந்திச்சுது. கையில 4 சீட்டுகள். அடப்பாவமே இது தான் அந்த மூண்டுக்கும் சீட்டு எடுத்திருக்கா? அந்த அம்மாவுக்கு இது தான் புருசனா?அதுவாவது பரவாயில்லை.  அந்தப் பச்சை மண்ணுக்கும் அப்பனா?


கோதாரிப் பிடிப்பானே? உனக்கு எங்கேயடா அறிவு போச்சுது? இந்த வயதிலும் உனக்கு பொண்டாட்டி கேக்குதா? அது தான் போதாதென்று குழந்தை வேறா? நீ எப்ப மண்டையப் போடப் போறியோ? அதுக்கப்புறம்?  பொண்டாட்டியாவது எங்காவது தொடுப்பு வைச்சு சமாளிச்சிருவா? புள்ளைங்க? பாவம் அறியாத வயசிலேயா எல்லாத்தையும் துலைச்சிட்டு நிக்கணுமா? ஆசைப் பட்டா ஏதாவது செய்து துலைக்க வேண்டியது தானே எதுக்கடா பன்னி மாதிரி பெத்துத் தள்ளியிருக்க?

மனசுக்க வெக்கை அடிச்சுக் கொண்டிருந்தது. இவ்வளவு கேள்விகளும் மண்டைக்க ஓடிக் கொண்டு தான் இருந்தது, கேக்கேல்ல.    திடிரென்று சின்னன் தூங்கி வழிஞ்சது. கிழம் மடியில தூக்கி படுக்க வைக்க பெரிசு,தாயிடம் அம்மா தாத்தா மடியில தங்கச்சி தூங்குது எண்டு போட்டுக் குடுத்தது.

அட சனியனே, தாத்தாவைப் போய் அப்பன் எண்டு நினைச்சியே? உனக்கெதுக்கெடா இந்த தேவையில்லா ஆராய்ச்சி. பெரிய புடுங்கி மாதிரி  நினைப்பு வேற. உன்னை எவனாவது கேட்டானா? ஏறினமா முடிஞ்சா ரெண்டு துண்டை பார்த்தமா இறங்கினமா எண்டில்லாமா ஞாயம் கதைக்க வந்திட்டான்.  போடா………

மலையாழத்தியுடன் 3 வருடங்கள்.

Filed under: மலையாளி — pukalini @ 01:14

நண்பனின் கதை.

மணி 11 ஆகி இருக்கும், கட்டிலில் குப்புறப் படுத்து பாதி சாமத்தைத் தாண்டி இருப்பேன். எனது அறை வாசிகள் எல்லோருமே துடிச்சுப் பதைத்து எழுப்பினார்கள். என்னடா கண்றாவி  எண்டு கேட்டால், பக்கத்து விடுதியில் இருக்கும் மலையாள துண்டுக்கு  காலையில் பிறந்த நாளாம். நான் அண்ணன் ஏதாவது செய்ய வேண்டுமாம்.  அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை. போதாதற்கு அந்தப் பெண் வெறு எனது வகுப்புவாசி. சரி ஏதாவது செய்து தொலையுங்கடா என்று சொன்னது தான் தாமதம். ஆளாளுக்கு ஒரு திட்டம் போட்டாங்கள். கடைசியில் ஒரு மட்டையைக் கொடுத்து விடலாம் என்று முடிவானது. அதுவும் யாரோ ஒருத்தன் தனது நண்பனுக்கு கொடுக்க இருந்தது. பெயரும் எழுதியாச்சுது. அப்புறமா குழப்பம் ஆரம்பமாச்சுது. யாருக்கு பிறந்த நாள் என்று. எனக்குத் தெரிந்து என்னுடன் இரண்டு மலையாளத் துண்டுகள் படிக்கின்றன. யாருக்கு என்ன பெயர் என்று இன்னமும் தெரியாது. இருவருக்கும் இரு சொல்லில் ஒரே மாதிரியான பெயர்கள். ஒன்று குண்டு. அடுத்தது ஒல்லி. அப்படித் தான் நாங்கள் அடையாளம் காண்பது.  நாங்கள் குண்டுப் பெண்ணுக்கே பெயரெழுதி விட்டோம். அப்புறமா அது ஒல்லிக்கு என்று தெரிந்து பெயரை மாற்றி அது தெரியாமல் இருக்க ரோசாப் பூவும்  கீறி கொடுத்து விட்டாச்சு. அங்கிருந்து நன்றியும், ஒரு சாப்பாட்டுத் தட்டில் கேக் துண்டும் வந்தது. அது எனக்கு மட்டும் தானாம். அப்புறம், இங்கிருந்து ஒரு அப்பிள் பழமும் கழுவிய தட்டுடன் பரிமாறியது.

அப்பாடா தொடங்கியது சனியன். அதுக்கப்புறமும் நான் அந்த ஒல்லிப் பிச்சானுடன் பேசியது இல்லை. ஆனால், அடங்கி வைத்து வெடிப்பது போல செய்தி மறு வளத்தால் சுழன்று அடித்தது. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதலாம். அன்றைய  தினம் நாங்கள் இருவரும்  இரவு; நடுச் சாமம் தாண்டியும் பெண்கள் விடுதித் துவாரத்துக்குள்ளால் காதல் தூது அனுப்புக் கொண்டிந்தோமாம். நல்லது. அப்படியே இருக்கட்டும் என்று விட்டாச்சு. அதுக்கப்புறம் தான் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. அவளை மடக்க திட்டம் போட்டவர்கள் எல்லோரும் எனக்குப் பயந்தோ இல்லை உறுதிப் படுத்தியோ விலகி விட்டார்கள். அவளுக்கும் கொஞ்சம் ஆறுதலானது. பாதி மலையாளிப் பசங்களுக்கு வார இறுதி நாட்களில்  வீடு போகும்  நேரங்களில் பயணத்தில் சூடு தேய்க்க பெண்டுகள் வேண்டும். அதிலும் படிக்கிற பெண்ணாக இருந்தால் வசதியாகாவும், நன்றாகவும் இருக்கும் என்பதற்காகவே  காதலிக்கிறமாதிரி ஒரு காபந்து பண்ணுவார்கள்.

இதற்கிடையில் எங்களுக்கான தனி விடுதியில்  தங்கி இருந்த இருவருக்கு மஞ்சள் காமாலை வந்து சேர்ந்தது. அதே நேரம் அவளுக்கும் காய்ச்சல் அடித்து. பாவம் வகுப்பிலேயே சோர்ந்து போனாள். எனக்கு ஏதோ சந்தேகம் பட அவளுக்கு எடுத்துச் சொல்லி  வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அவளுக்கும் அதே  வருத்தம் வந்து தொலைத்தது.  நானும் ஏதோ அக்க்றையில் உடம்புக்கு என்னாச்சு என்று அடிக்கடி பக்கத்துப் பெண்ணைக் கேட்க, அவளும் இவன் ஏதோ கரிசனை முற்றித் தான் கேட்கிறான் என்று இல்லாத ஒன்றை ஊதிப் பெருக்க எல்லோருக்கும் இருவரும் சோடியாம் என்று பத்திரிக்கை அடித்தாகி விட்டது. அடக் கருமத்தே அவளுடன்  இரண்டு வார்த்தைகள் சேர்ந்தாப்ப பேசி இருக்க மாட்டனே? அதுக்குள்ள இப்படியா? அதிலும் இந்த மலையாளிகளுக்கு மூக்கில் வியர்த்தால் ஆள் காலி. இப்படித் தான் ஒரு மலையாளம் பெண் வேறு ஒருவருடன் கொஞ்ச நேரம் சேர்ந்தாப்ப பேசினதுக்கு உனக்கு பாண்டிக் குன்னா கேட்குதாடி என்று  அடிக்காத குறையாய் திட்டுனவர்கள். இப்படி ஒரு விடயம் இருப்பது தெரிய வந்தால் என்ன நடக்கும். ஆரம்பித்தது பூசைகள்.

சும்மாவே என்னைப் பார்க்கிறவர்கள் பயப் படுவார்கள்.அப்படியான ஒரு கவர்ச்சியான உருவமைப்பு. ஊரில் இருக்கும் எவனையும் விட்டு வைக்காமல் சிநேகம் பிடித்து வைத்திருக்கன். சாப்பாடு போடுற ஆயாவிலிருந்து, கல்லூரி முதல்வர் வரைக்கும் பழக்கம். சொல்லும் சொல் சந்தை ஏறும். போதாதற்கு மலையாளக் கூட்டம் ஒன்றையும் பழக்கம் பிடித்து வைத்திருந்தேன்.  ஆக மொத்தம் என்னுடன் நேரடி மோதலுக்கு கொஞ்சம் பயந்தார்கள்.  உள்ளிருந்து போட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். எப்பொழுதாவது அக்கா கடைக்கு தம் அடிக்கப் போய் ஒரு மலையாளத்தான் அகப்பட்டால் போதும் அப்படியே பாச மழை பொழிய தொடங்கிடுவார்கள். நானும் குடை இருந்தும் நனைய வேண்டியது தான். உனக்குத் தெரியுமா அவளுக்கு உள்ளூரில ஒரு நண்பன் இருக்கான். அவனைத் தான் கலியாணம் கட்டப் போறாள். அதுக்கென்னடா எனக்கு என்ன வந்தது? அவள் யாரைக் காதலிச்சா என்ன? எவன் கூடப் போனால் என்ன? எனக்கு என்ன குடும்பமா முழுகிப் போயிரும்? எனக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்? அவள் யாரு நான் யாரு? மிஞ்சிப் போனால் 30 அளவிலையாவது உள் சட்டை போடுறவளாயிருக்கிறாளா?.

கடைசியாய் ஒரு அம்பு. எப்படித் தான் ஒரு பெண்ணை பற்றி இப்படிக் கேவலமாக  கதை கட்ட முடியுதோ? இடையில், தமிழ் நாட்டுக்கு படிக்க வரும் மலையாளத்திகளுக்கு உள்ளூரில மதிப்புக் கிடையாதாம். எனக்கும் நிறையத் தெரியும். போனாப் போகுது. ஆண்களுக்கு மட்டும் கம்பி நீளும் போது பெண்களுக்கு கசியக் கூடாதா? ஒரு  நாள் பஞ்சாபி தாபாவில் என் செலவிலேயே எம்சி அடிச்சுப் போட்டு ஒருத்தன் கக்கத் தொடங்கினான். சேட்டா, அந்தப் பொண்ணுக்கு கலியாணமாயிருச்சு. புருசன் அவுட்டென்று நினைக்கிறன். இல்லாட்டி விட்டுட்டு போயிருக்கலாம்.குழந்தையும் இருக்கலாமாம்.  அடப்பாவி. அடிச்சது முழுக்க  மூக்கால் காத்து மாதிரி வெளியே போயிற்றுதே.

அன்றிலிருந்து எனக்கும் கொஞ்சம் காதால்  சுடர்விடத் தொடங்கியது.(கண்டிப்பாகக் காதல் இல்லை. வெறும் பச்சாதாபம்.) பாவம் பொண்ணு நிறையவே அடி பட்டிருக்குது. அதனால் தான் சாப்பாடு தண்ணி இல்லாமல் இருந்து மெலிந்து போயிட்டுது.குழந்தை வேறு இருக்காமே? மறுமணம் செய்வதில் என்ன தப்பு. இவளோடு கூட வாழ்வதில் கண்டிப்பாக ஒரு அர்த்தம் கிடைக்கும்.  காதலிக்கும் போதே அப்பாவாகி விடுவேன். கலியாணாத்துக்கு முன்னரே ஊருக்கும் போய் குழந்தையுடன் ஒட்ட வேண்டும். அப்பொழுது தான் பெரியாளானாதும் சொந்த அப்பா மாதிரியான ஒட்டல் தெரியும். எனக்கு ஒரு குழந்தையே போதும். இரண்டுடனும் சந்தோசமாக இருக்கலாம். பாவம் அளு வேறு சரியான் நோஞ்சான். இரண்டுக்கு மேல தாங்கவும் முடியாது. வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கணும். யாருக்கா நாம் வாழ்கின்றோமோ அது பெறுமதிமிக்கதாக இருக்க வேண்டும்.

ஆக மொத்தம் எனக்குள் ஒரு நல்லவன் மாதிரி ஒருத்தன் உருவாகினான். அவளைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவளுக்கு உதவுவதாக எண்ணி, அவளை மிகவும் கீழ்த்தரமாக சிந்திக்கத் தலைப்பட்டேன். எனக்கு எவருமே இந்த உரிமையைத் தரவில்லை.  நானாக எடுக்கவுமில்லை. வித்தியாசமான உணர்வுகளின் போராட்டங்கள்.

அடுத்த மின்னஞ்சலில் வருவது பின்னால்……….

June20, 2009

நீ என்ன பெரிய புடுங்கியாடி?

Filed under: மலையாளி — pukalini @ 19:29

‘ஆமா, நீ முதல் முதல்ல கல்லூரிக்கு வந்த அன்றே என்ன நடந்தது? உன் மூஞ்சி மீசை இப்படி இருக்கே உள்ளே எப்படி என்று கேட்டு அழ வைத்தவர்கள் யார்? அடுத்த நாள் அதை மழித்து விட்டு வந்த போது உள்ளேயுமா எனக் கேட்டவர்களை மிரட்டி, வெருட்டி உன்னைக் காயாமல் பார்த்துக் கொண்டது யார்? எல்லாருமே உனது மலையாளக் கூட்டம் தானே? அப்பொழுது மட்டும் என் துணை எதுக்கு உனக்கு?  நானும் உன்  கூடப் படித்தவன் தானே? எதற்கு முன்னோர்களிடம் முறைத்துக் கொண்டேன்? பாவம் பிள்ளை படிக்க வந்த இடத்தில் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாய் படிக்கட்டும் என்று தானே?’

‘உன் உடம்பைப் பற்றி பேசுவது அநாகரீகம் தான். இருந்தாலும், நீ இவ்வளவு சொன்ன பின்னும் நான் ஏன் மூடி வைக்கணும்? உனக்கு ஒரு பட்டப் பெயர் இருக்குதே? உனக்கும் அது தெரியும் தானே? சிலர் அயன் பொக்ஸ் என்பார்கள் பலர் கரம்போர்ட் என்பார்கள். எனக்கு மொத்தத்தில் உருவி விட்ட உலக்கை மாதிரி, உயரத்தில் மட்டும் தான் ஆளா இருந்த. ஏதோ கனவுக்கன்னி கணக்கில புலம்புற?  நீயெல்லாம் எதுக்கு உள்சட்டை போட்ட? சும்மா பருவுக்கு போடுற பசை எதையாவது வாங்கிப் பூசி இருக்க வேண்டியது தானே? ‘

‘வகுப்பில் உனக்கு அருகில் இருந்து தொந்தரவு பண்ணினேனா? ஏன் உனக்கு கொஞ்சமாவது புத்தி வேண்டாமா? பக்கத்து, பக்கத்து இருக்கையில் இருந்து எப்படி உன்னை உற்றுப் பார்க்கலாம்? அப்படிப் பார்த்தாலும் அது உன்னை இல்லை, பக்கத்திலிருந்த கட்டையை என்று உனக்குத் தெரியாதா? பரிசோதனைக் கூடத்தில் விடாது கறுப்பு மாதிரி ஒட்டினேனா? உனக்குத் தான் மின்சாரமென்றால் நடுங்குமே? உனக்கு உதவ யார் வந்தார்கள்? ஐந்து வயது கூடிய உன்னை எவன் சீண்டுவான்? பாவம் பிள்ளை என்று ஒத்தாசையா இருந்தது, உனக்கு கடுப்பாயிற்றா?’

‘வாத்திமார்களிடம் வத்தி வைச்சேனா? முண்டம், உனக்கு காய்ச்சல் அடிச்ச போது மஞ்சள் காமாலை தான் என்று சொல்லி வீட்டுக்கு பத்திரமா அனுப்பி வைச்சது யாரு? வரவுப்பதிவேட்டில் உனது பதிவுகள் மிகவும் குறைவான போது சரிக்கட்டி பரீட்சை எழுதச் செய்தது யாரு? பல்கலைக் கழக பரிசோதனையிலும் உனது பேப்பருக்கு செய்து காட்டி  தாமதித்தது யாரு? நீ வெடிக்க வைச்ச  நாலு உபகரணக்களுக்கும் பொறுப்பெடுத்து  திருத்திக் கொடுத்தது யாரு?ஏண்டி உன்னைப் பார்த்துப் போன எல்லா நாளுமே பரீட்சையில் நான் கோட்டை விட்டது  யார் தப்பு?’

‘விடுதிக்கு போன் பண்ணி இம்சையைக் கொடுத்தேனா? ஒரு தடவையாவது உன் கைப் பேசிக்கு அழைத்திருப்பேனா? பரீட்சைப் பெறு பேறுகள் வந்த போதெல்லாம் நீ தானே எனக்கு அழைத்து பெண்கள் விடுதி முழுவதுக்கும் ஒலிபரப்பினாய்? சனியானால் உனக்கு ஆக்கினையா? அது உனக்கு மட்டும் தானா? எனக்கு படிப்பிச்ச ஆசிரியைக்கே விடுதி பூராக் கேட்க ஐ லவ் யூ சொன்னவங்கள் தானே? உனக்கு மட்டும் தான் வித்தியாசமா?  தண்ணி அடிச்சிட்டு கூத்தடிச்சால் ஓட்டைகளுக்கால் ஒட்டிப் பார்த்து கேவலப் படுத்தியது யாரு? எப்பொழுதாவது அசவரமாய் பேசக் கூப்பிட்டால் என் ஆளு என்று எல்லோருக்கும் தம்பட்டம் அடிச்சு சொன்னது யாரு? எவளோடையாவது, எங்கேயாவது பேசினால் அவளைக் கூப்பிட்டு மிரட்டியது யாரு?  நான் யாருடன் தான் பேச முடியும்?’

‘வெளியால் நான் தம் அடிக்கக் கூடப் போகக் கூடாதா? போன போதுகளில் நீ வெளியில் வந்தது என் தப்பா?  நேரங் கெட்ட நேரங்களில் உனக்காக கடை தெருக்களுக்கு போகச் சொல்லும் போது ஒன்றுமே தெரியலையா?’

‘ என்னுடைய சகோதரங்கள் உன்னை அண்ணி என்று கூப்பிட்டது பிடிக்கலையா? ஆரம்பத்தில் பிடித்துத் தானே இருந்தது? அவர்கள் என்றைக்காவது உன்னை தரக் குறைவாகப் பேசியது உண்டா? உன்னுடன் நான் நெருங்கிப் பழகியதால் இனிமேல் அண்ணி என்று கூப்பிடுகிறோம் என்று சொல்லித் தொடர்ந்தது யார் தவறு? சும்மா இருந்த என்னை  நீ நெருக்க, அண்ணா இது சரியில்லை. ஒரு பெண்ணின் மனசில் ஆசையை வளர்ப்பது தப்பு. உணர்வுகளை காட்டிய பின் விலகுவது தப்பு. உங்களுக்கும் அவளை பிடித்திருக்கு, அண்ணிக்கும் டபுள் ஓகே. பேசாமல் போய் காதலிக்கிறேன் என்று சொல்லிருங்க என்றது அவர்கள் பிழையா?’

‘ முன்னப் பின்னத் தெரியாத உன்னை,  படுக்கையில் இறுக்கி அணைக்கக் முடியாத ஒன்றை எப்படிக் காதலிக்கலாம்? எதுக்கு? உனக்கு ஏற்கனவே கலியாணம் ஆச்சு, குழந்தை வேற இருக்கு, புருசன் அவுட்டு என்று சொன்னவர்களுக்கு பரவாயில்லை, நான் பாத்துக்குப்பன் என்று பெண்களை வேறு கோணத்தில் வைத்து சிந்திக்கத் தொடங்கியது உன்னால் தானே? பாலக்காடு தாண்டி வரும் பெண்களை கேரளாவில் எவனுமே ஏறெடுத்துப் பார்க்க மாட்டான் என்று கலகமூட்டிய உன் சக ஆண் வர்க்கத்துக்கு சாட்டை கொடுத்து உனக்காக நெருங்கியது என் தப்பா?  மாசத்தில பாதி நாள் நோஞ்சான் கொழி மாதிரி துவண்டு போகும் உன்னை கட்டினால் என்ன ஆகும் என்று மிரட்டியவர்களுக்கு சமாதானம் பேசியது என் தப்பா?’

மிச்சத்தை மிச்சமிருக்கும் போத்தலையும் முடிச்சிட்டு வைச்சிருக்கன்.

June19, 2009

மலையாழத்தியின் வெடிப்பு.

Filed under: மலையாளி — pukalini @ 18:23

மலை+ஆழம்=மலையாழம்.

‘இதைப் பாருங்கள் இந்தப் பொறுக்கி நாய் இருக்கிறதே, இது ஒரு சுத்தமான கேவலம் கெட்ட  மனு.வெட்கம்,மானம்,சூடு, சுரணை, ரோசம் எதுவுமே கிஞ்சித்தும் கிடையாது.   நான் எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. இப்பொழுதும் என்னை இடைஞ்சல் செய்து கொண்டே இருக்கிறது. இதுக்கு என்ன செய்யலாம்? இதனால் நான் பட்ட துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அளவே கிடையாது.’

‘ நான் எப்பொழுது இந்தக் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனோ அப்பொழுதே எனக்கு எட்டுச் சனி தொடங்கிற்றுது. எத்தனையோ கல்லூரிகள் இருந்தும், எத்தனையோ பிரிவுகள் இருந்தும் வேலை மெனக்கெட்டு கொல்லத்தில் இருந்து இங்கு, இந்தப் பாடத்துக்குத் தான் வந்து சேரணுமா? அதுவும் மூன்று வருடங்கள் காத்திருந்து, காசு சேர்த்து ஆசைப் பட்டு சேர்ந்தால் இப்படியும் ஒரு இம்சை எனக்கு கிடைக்கணுமா?’

‘சேர்ந்த தொடக்கத்தில் என் சொருபத்தைப் பார்த்து பின்னால் அலைந்தவர்கள் பலர். அவர்கள் எல்லோரையும் கடத்தி விட்டு படிப்பம் என்றால் முன்னுக்கு ஒரு மூஞ்சூறு. நான் தான் யாருக்குமே எந்தப் பாவமும் செய்ததில்லையே? எந்தக் கெடுதலும் மனசால் கூட நினைக்கலியே? பின்னே எங்க அப்பா, அம்மா செய்த பழி தான் என்னை விடாது துரத்துதா?’

‘ வகுப்புக்கு வந்திருந்தால் பக்கத்து இருக்கையில் சனியன் குடியேறும். பரிசோதனைக் கூடம் போனாலோ பின்னாலேயே சுற்றிச் சுற்றி வரும். அட அதாவது பரவாயில்லை. கண்ணைக் கொஞ்சமாவது அங்கால இங்கால திருப்ப வேண்டாமா? அப்படி என்னத்தை தான்  நாலு வருசமா புகுந்து ,புகுந்து பார்த்தானோ? ஒரு பெண்ணுக்கு எத்தனை இடைஞ்சல்கள் வரும்.  சுடிதாருக்கு வெளியாலே தெரியும் உள் சட்டையைக் கூட சரிப் பண்ண முடியாது. பன்னாடை அதை வேறு வெறித்துப் பார்க்கும். கண்ட இடத்தில் கடிச்சாக் கூட சொறிய இயலாது. விடுதிக்கு வந்து ஆடை களைந்து பார்க்கும் போது எல்லாமே சிகந்து போய் இருக்கும்.’

‘விடுதிக்கு வந்தாலோ ஒரே கும்மாளம். வாயிற்காப்பாளனை சரிக்க் கட்டி பேசக் கூப்புடிறது. வந்தாலும் எட்டி, எட்டி உள்ள பார்க்கிறது. விடுதித் தொலை பேசி எண்ணிற்கு அழைத்து  யார் யாரோவிடமெல்லாம் தன் காதல் கட்டுரையை புலம்புறது. கூட இருக்கும்  கழிசடைகளை விட்டு அண்ணி, அண்ணி என்று அலற விடுவது. முழுக் கல்லூரிக்கும்  இருவரும் ஏதோ காதல் புறாக்கள் என்று பேப்பர் அடைச்சு விடுறது. அதிலும் சனியானால் போச்சு தண்ணியைப் போட்டுட்டு ஆட்டம், பாட்டம். அதுக்கு வேற  மலையாளப் பாட்டுக்கள். தாங்க முடியல.’

‘உள்ளுக்க தான் இப்படி என்றால் வெளியால் போனாலும் தொந்தரவு, முகர்ந்து கொண்டே பின்னால் வந்திரும். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பார்வையாலேயே கொல்லுறது. அப்பப்பா இவனாலேயே ஞயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் போவதையே நிறுத்தியாச்சு. கடை தெருவுக்கும் போக முடியல.’

‘போதாதற்கு வகுப்பில் உள்ள் மலையாளிகளைப் பிடித்து மலையாளம் படிக்கிறது என்று பீலா காட்டுறது. யார் வீட்டுக்காவது போயிட்டு வந்து கோட்டையத்தில் காணி பார்த்திருக்கன், ஆலப்புழாவில் வீடு கட்டுவமா என்று நச்சரிக்கிறது. வகுப்புக்கு பாடம் நடத்த வாறவர்களிடம் இருவருக்கும் ஏதோ தொடுப்பு இருக்கு என்று  போட்டு வைக்கிறது.’

‘ பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கும் போது திருநீறு தருவது. படிக்க விடாமல் வெறித்துப் பார்க்கிறது.  தான் பெயிலானதைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் நான் பாசானதுக்கு தண்ணிப் பார்ட்டி வைக்கிறது. தண்ணியில என்னைப் பற்றி கண்டதையும் உளறுவது.’

‘ஓணம் விழாக்களுக்கு கோலம் போடுறன் எண்டு  நக்கிக் கெடுக்கிறது. வேட்டி கட்டிக் கொண்டு வந்து ஏதோ பாசன் சோ மாதிரி எல்லோருக்கும் சீன் போடுறது. ஐஸ்கிரீமுக்கு அடிபட்டால் ஏதோ தேவ தூதன் மாதிரி கண்டவனிடமும் கெஞ்சி வாங்கித் தருவது.’

‘இதெல்லாம் எதுக்கு? என்னை மடக்கவா? இந்தத் தேவாங்கு என்றைக்காவது கண்ணாடியில முகத்தைப் பார்த்திருக்குமா? என் நிறமெங்கே கவுட்டுப் போட்ட கரிச் சட்டி எங்கே? நிலம் கூட்டும் எந்தன் முடியெங்கே, சொட்டை எங்கே? கொஞ்சமாவது புத்தி வேண்டாம்? எத்தனையோ ஆண் மக்கள் சுத்திச் சுத்தி வரும் போதே ஒதுக்கித் தள்ளிய எனக்கு இந்த எருமை மாடு தான் கண்ணுக்க நிக்குமா?’

‘ இத்தனை காலமும் பொறுத்தாச்சு கடைசிப் பரீட்சை காலத்தில் ஆவது சந்தோசமா, நிம்மதியா இருக்கலாம் என்றால்  கடைசிக் கட்டம் என்று நெருக்குவாரம் பண்ணுறான். தாங்க முடியலை.’


June17, 2009

வேலி அடைப்பு.

Filed under: அப்பு — pukalini @ 05:58
Tags:

மத்தியான வெயிலுக்குள்  நின்று  ஓலை பொறுக்குவதற்கும் ஒரு தனித் திறமை வேண்டும். நாளைக்கு வேலி அடைப்பு. இன்றைக்கே நூறு  பனைகளில் ஓலை வெட்டி மிதிக்க வேண்டும். அப்பொழுது தான் நாளைக்கு நல்ல பதத்தில் வரும். ஏற்கனவே மூன்று பக்கத்து வேலியையும் கரையான் அரித்து பொத்தல் விழுந்து விட்டது. ஒரு ஓரமா ஒதுங்கி ஒண்டுக்கு அடிக்கவே முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனுக்கு பதுங்க வேண்டி இருக்குது.  நல்ல காலத்துக்கு அப்பாவின் சம்பளத்தில் கடனெடுத்து  முன் பக்கம் மட்டும் மதில் கட்டியாச்சு.அப்புவிடம்  வேலி அடைக்கச் சொன்னா அதுக்கப்புறம் அவர் பாத்துக்குப்பார்.

வீடு ஊருக்குள் இருந்தாலும் எல்லோருக்குமே ஒரு பனங்காணி தனியாக இருக்கும்.  எங்களுக்கும் கொஞ்சப் பனைகளோடு  சின்னதா ஒரு காணி. சும்மா நாட்களில் அந்தப் பக்கம் போவதே கிடையாது. பயம்.பனை வளவுக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கொட்டிலில் ஒரு வைரவர் கோவில்.  அந்த வைரவர் இரத்தம் குடிப்பவராம்.ஓலை வெட்டுற  நேரங்களில் அம்மம்மாவையும் கூட்டுக் கொண்டு போய் ஒரு எட்டுப் பார்ப்பதுடன் சரி. அங்கால் சற்றுப் போனால் பனைகளில் ஒட்டி இருக்கும் பூனைப் புடுக்குப் பழங்களைப் பிடுங்கிச் சாப்பிடலாம்.

நூறு பனைகளிலும் ஓலை வெட்ட நாலு பேராவது வேண்டும். ஓலை வெட்டும் காலங்களில் கள்ளுச் சீவுற பருவம் போயிருக்கும். ஆட்களைப் பிடிக்கிறதும் சுலபம். போததற்கு அப்பு வாடிக்கையா கள்ளுக் குடிக்கப் போகிறவர்கள் கண்டிப்பாக வருவார்கள். காசும் உடனேயே கொடுக்கப் படும் என்பதால் தயங்காமல் வருவார்கள். அப்பு வேறு கத்திகளை தனியாகத் தீட்டி வைத்திருப்பார். கத்தி தீட்டுறது என்பது சிலை செதுக்குவது போல. பழைய  உலக்கையை கிடத்திப் போட்டு கொஞ்சம் மண்ணைத் தூவிப் பாங்காகத் தீட்ட வேண்டும்.  தீட்டிய கத்தி பளபளக்கும். கத்தி தீட்டித் தீட்டியே உலக்கையும் தேய்ந்து போய் விட்டது.

காலையிலேயே ஓலை வெட்டுத் தொடங்கி விடும். வெட்டிய ஓலைகளை  மதிய வெயில் வரையிலும் காயப் போட்ட பின் தான் மிதிக்க வேண்டும்.இதுக்கிடையில் அம்மம்மா பன்னத்துக்கு நல்ல ஓலைகளை பொறுக்கி ஓரமா போட்டு விடுவா. அப்புவும் பட்டை பிடிக்க என்று கொஞ்ச ஓலைகளை ஒதுக்கி விடுவார். எங்களது வேலை சாரோலை சேர்க்கிறது. அப்பொழுது தான் அம்மம்மா சாயம் போட்டு பாய் பின்னித் தருவா.

மதிய வெயிலுக்குள் காய்ந்த ஓலைகளை பொறுக்கிக் கொடுக்க அப்பு மிதிக்கத் தொடங்குவார். ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு மிதிக்க மிதிக்க அது ஒரு கோடு மாதிரி வளைந்து ,வளைந்து பனைகளுக்கு இடையால் புகுந்து, நெளிந்து வரும். கடைசியில் பெரிய கல்லைப் போட்டு பாரம் கொடுத்து மிதிப்பு வேலை முடிந்து விடும். பின்னேரம் வரை அப்படியே கிடக்கும் ஓலைகளை வண்டியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு போய் திரும்பவும் ஒன்றாகப் போட்டு மிதிக்க வேண்டும்.

இரவு அம்மம்மா உழுந்து ஊற வைத்து, ஆட்டுக் கல்லில் அரைத்து புளிக்கப் போடுவா. காலையில் எப்படியும் வேலி அடைக்க பலர் வருவார்கள். சொந்தக் காரர்கள்,அப்பு போய் வேலி  அடைத்துக் கொடுத்தவர்கள், அப்புவை தங்களது வேலி அடைப்புக்கு கூப்பிடப் போகிறவர்கள் என்று ஒரு கூட்டம். அதிலும் அப்பு போய், வர முடியாதா கடன் காரர்கள் தங்களுக்கு அடைக்க வர வேண்டியவர்களையும் எங்களுக்கு மாற்றி விடுவார்கள். நல்ல பண்ட மாற்று. எலோருக்குமே  நாளைக்கு தோசையும் சம்பலும்.

காலையிலேயே அப்பு எழுந்து ஓலைகளை தெண்டல் ஓலை, சாத்தல் ஓலை என்று பிரித்துப் போடுவார். சாத்தல் ஓலை குத்திக் குத்தி வைக்க, தெண்டல் ஓலை சரித்து ஒன்றுக்குள் ஒன்றை வைத்து முட்டுக் கொடுக்க. சாத்தல் ஓலை எப்பொழுதும் உயரமாகவும், பரப்பில் பெரிதாகவும் இருக்கும். தெண்டல் ஓலை அனேகமாகப் பிய்ந்து,கிழிந்து போயிருக்கும். அம்மம்மா அடுப்படியில் கங்கு மட்டையைப் போட்டு எரித்து தோசை சுடுவதில் மும்ம்முரம்மாக இருப்பா.

என் வேலை தெரிந்த ஓலைகளை பொறுக்கி கொண்டு போய் போடுவது தான். காலையில் ஆட்கள் சேர்ந்ததும் அப்பு கோவணத்தைக் கட்டிக் கொண்டு குந்தி இருந்தாரெண்டால் முன்று பக்க வேலியும் அடைச்சாப் பிறகு தான் எழும்புவார். அனேகமாகா வேலி வெளிப்புறமாகத்  தான் அடைக்கப் படும். நான் வீட்டு வளவுக்குள் வந்து குத்தூசியில் வரும் கயிற்றை வாங்கி திரும்பவும் குத்தி விடுவேன். கயிறு விலை கூடிய காலங்களில் எல்லாம் அப்பு பனை நாரையோ, தென்னம் பாளையைக் கிளித்தோ கட்டுவதற்கு ஏதாவது தயார் பண்ணி விடுவார்.


வேலி அடைப்பு வேகமாகப் போய்க் கொண்டு இருக்கும் . சாத்தல் ஓலையை வைத்து  பின் தெண்டி, பிறகு சாத்தி மட்டைகளை வைத்துக் கட்ட வேண்டும். அப்பு மள மளவென ஓலைகளின்  உயரத்தைப் பார்த்து மட்டையை அடியால் வெட்டித் தள்ளிக் கொண்டு தெண்டிக் கொண்டே போவார். குத்தூசியால் குத்திக் கட்டுபவர்களும், அமத்திப் பிடிப்பவர்களும் அவருக்குப் பின்னால் ஓட வேண்டும்.வேலி அடைத்து முடிந்த பின் பச்சை ஓலைகளை மாடு தின்னாமலிருக்க சாணியைக் கரைத்தோ இல்லை கழிவு எண்ணெயைத் தெளித்தோமணத்தை நீக்குவார்கள்.


பொட்டு, கடப்பு, கதியால்களும் தொடரும்…

(அப்புவின் நினைவுகளை எடுத்துச் செல்ல எழுத வேண்டும். பலருக்கும் இவை புரியாது. மற்றவை மட்டும் புரிந்து விட்டனவா? இதில் விடுபட்ட சம்பவங்கள் பின்னாளில் வரும். ஏதோ அப்புவுக்கு நான் செய்யப் போகும் ஒரு பாராட்டுப் பரிசு.)

June15, 2009

ஆட்டுக்காரியும் வியட்னாமியும்.

Filed under: சமுகம் — pukalini @ 21:17

கல்லூரி  விடுமுறை கழிந்து நான் தான் முதலில் விடுதிக்கு வந்தேன். ஒரு சில மாணவர்கள் மட்டும் ஊருக்குப் போகாமல் விடுதியிலேயே தங்கியிருந்தனர். அவர்களுக்குச் சமைத்துப் போடவென்று ஒரு சமையல்க்கார பையனும் தங்கி இருந்தான். விடுதியில் இருந்து கடைசியாகப் போனதும் நான் தான். ஆகவே விடுதியில் யார் யார் தங்கி இருந்தார்கள், அவர்களின் பொழுது போக்குகள் என்னவென்று கொஞ்சமாவது தெரிந்திருந்தது. அதிலே ஒரு வியட்னாம்காரன் முக்கியமானவன்.

விடுமுறையில் ஊருக்கு போய் வரக் காசு அதிகம் தேவைப்படுமென்பதால்  உள்ளுக்குள்ளேயே தங்கி விட்டான். அவனை முதன் முதலில்  மாணவர் விடுதிக்கு வரவேற்றவனும் நான் தான். வரும் போது ஆங்கிலம் என்றால் என்னவென்றே தெரியாது. தத்தித் தத்திப் பேசினோம். உங்க ஊரில் என்ன என்ன கடவுள் எல்லாம் இருக்கின்றது என்று கேட்டதுக்கு, கைகள் இரண்டையும் விரித்துப் பிடித்து , நாக்கைத் தொங்கப் போட்டுக் காட்டினான். இயேசுவாம். பையனுக்கு குளிப்பது என்பது ஏதோ சாகடிப்பது போல. வெறும் தகர டப்பாவுக்குள் தண்ணீரை ஊற்றிக் குளித்து விடுவான். அதுக்குள் குளியல் நுரையையும் போட்டு விடுவான்.

சமையலில் அவனை அடித்துக் கொள்ள முடியாது. சமைத்தால் வாசம் வயிற்றைக் குமட்டும். ஊரில் உள்ள இலை, குழை எல்லாவற்றையும் போட்டு சமைப்பான். விசேடமாக பன்றிக் குடல். இப்படித்தான் ஒரு நாள் பாம்பொன்று வசமாக மாட்டி விட்டது. அடிச்சுப் பிடித்து அவனிடம் கொடுத்தாச்சு. அவன் அதை  அப்பிடியே தலையில் பிடித்து குடலை உருவினான். உள்ளுக்குள் இருந்து ஒரு தவளையும், ஒரு ஓணானும் கீழே விழுந்தன. அன்றைக்கு நல்லா ஒரு பிடி பிடித்திருப்பான். நாங்கள் சமையல் வாசம்  வராமலிருக்க கதவுகள் , யன்னல்கள் எல்லாவற்றையும் மூடி விட்டோம்.

அவன் எப்பொழுதும் துடிப்பாக இருப்பான். விளையாடுவான். இல்லாவிட்டால் ஓடுவான்.

இப்படித்தான் விடுமுறை காலத்திலும் வெளியில் ஓடப் போயிருக்கான். பல நாட்கள். விடுமுறை கழித்து வந்ததில் அவனில் பல மாற்றங்கள். வெளியில் போவதில்லை. ஓடவும் தான். விடுதிக்குள்ளேயே அடைந்து கிடந்தான். என்ன ஏதென்று ஒன்றுமே புரியவில்லை.

அப்புறமாக சமையல்க்காரப் பையன் மூலம் தகவல்கள் மெது மெதுவாக வெளியே கசிந்தது. பையன் ஓடப் போகிற வழியில் ஒரு பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறது.  அப்படியே அடிக்கடி ஓடப் போய் பெண்ணை சரிக்கட்டி விட்டான். அப்புறம் என்ன? ஒரே அசால் குசால் தான்.

இப்படியாகப் போய்க் கொண்டிருக்கையில் ஒரு நாள் ஊர்க்காரர்கள் பார்த்து விட்டார்கள். பையன் ஒரே ஓட்டமாக ஓடி விடுதிக்குள் புகுந்தவன் தான். வெளியே போகவில்லை. கல்லூரியில் மணிப்பூர் மாணவர்களும் படித்த படியால் யாரென்று தெரியாமல் ஊர்க்காரள் சமையல்க்காரப் பையனிடம் விசாரித்திருக்கிறார்கள். அவனும் பாவம் பார்த்துக் காட்டிக் கொடுக்கவில்லை.

அதுக்குப் பிறகும் அவன் அடங்கவில்லை. படித்துக் கொண்டிருந்த சில மாணவிகளை நல்லாவே அப்ரோச் பண்ணினான். மாட்டிச்சா இல்லையா அவனுக்குத் தான் வெளிச்சம். எப்படி இவனால் மட்டும் ஆட்டுக்காரியைக் கூட அப்படி நினைக்க முடிந்திருக்கிறது. கூடப் படிக்கிறதுகள் என்றாலும் பரவாயில்லை. அந்த மாதிரிப் படங்களிலும் அவன் உள்ளூர் தயரிப்புகளையே விரும்புவான். வித்தியாசமானவன்.அவன் ஆசைப் பட்டிருக்கான். அடைஞ்சிருக்கான்.

அப்பாடா இந்தப் பொண்ணுகள்/ பசங்கள் ஏன் தான் வெள்ளைத் தோலைக் கண்டால் இப்படி கிளர்கிறார்களோ? அதிலும் ஆடு மேய்க்கும் பெண் எப்படி இவனுடன் பேசியிருப்பாள்? பேசாமலேயே …………….. ம்.

கடைசியில அவனும் ஊருக்குப் போயிட்டான். ஒரு நாள் யாகுவில் வந்தான். அடக்க முடியாமல் ஆட்டுக்காரியை எப்படி சரிக் கட்டினாய் என்று கேட்டேன். ‘எல்லாம் எண்ட கலர்’ எண்டு சொல்லி செருப்பாலேயே அடிச்சான்.

June10, 2009

பாலான விளம்பரக் கருக்கள்.

Filed under: சமுகம் — pukalini @ 06:05

உள்ளுக்குள் இருப்பது மிகவும் அருவருப்பாக இருக்கலாம். என்ன செய்வது நானும் தான் அருவருப்புடன் எத்தனையோ விளம்பரங்களைப் பார்க்கின்றேனே?  வாசனை அடிச்சா உலக அழகியே பக்கத்துல வந்து  தடவிக் கொடுப்பா. அதுக்கு கீழே உள்ளதெல்லாம் கொஞ்சம் மிகையாவே இருக்கலாம்.


1. இவர் ஒரு பாரிய பிரபலம். தக்க வயதில் ஒரு மகளும் உண்டு. இவரை வைத்து எப்படி விளம்பரம் (வியாபாரம்)பண்ணலாம்? ஆணுறைக்கு?

அப்பன் வீட்டு முற்றத்தில்பழுதடைந்த மின் குமிழை சரிப்பண்ணிக் கொண்டு இருக்கின்றார். மகள் வெளியே கிளம்பிப் போகின்றாள். இப்பொழுது அப்பன் பெருமூச்சு விட்டவாறே  நிழல்க்கருவியைப் பார்த்து சொல்கிறார் ‘ இப்பொழுதெல்லாம்  மகள் வெளியில் போகும் போதெல்லம் நான் கவலைப் படுவதே இல்லை. நான் தான் அவளுக்கு ——– ஆணுறை வாங்கிக் கொடுத்திருக்கேனே? அது மட்டுமா நம்ம நாட்டு படிச்ச எருமைங்கள் எல்லாம் புதுமை பேசினாலும்  கட்பு, கண்ணி என்று புலம்புவார்கள். அதனால பார்த்து பின் வாசல உபயோகிம்மா என்றும் சொல்லி வைத்திருக்கின்றேன். என் மகள் என்னை மாதிரியே சமத்து. என்னா மாதிரி அசத்துறா பாருங்களேன்’. முடிஞ்சுதா?

அப்புறம் பொண்ணு நாலு வாலுகளுடன் கும்மி அடிக்கும் ஒரு காட்சி.  விளம்பரம் தத்ரூபமா வரும்.

2.அடுத்தது ஒரு கிரிக்கெட் பிரபலம். இவரைக் காலணிக்கு உபயோகப் படுத்தலாம்.

வீரர் பாய்ந்து, விழுந்து ஓடுகின்றார். காலையே படம் பிடிக்கலாம். அப்பொழுது தானே காலணி தெளிவாகத் தெரியும். களைச்சு விழுந்து ஓட்டம் முடிந்த பிறகு காலணி அழுக்கைத் தட்டிய படியே சின்னதா ஒரு வாக்கு மூலம்.

‘இதனால நான் மட்டும் ஓடல, என்னுடைய அம்மா வயசு 56. பக்கத்து வீட்டு  சின்னப் பொடியுடன் தீராக் காதல் கொண்டு ஓடிட்டா. இன்னமும் கண்டு பிடிக்க முடியலன்ன பாருங்களேன். அவவும் போட்டிருந்தது இந்த மாதிரிக் காலணி தான்.செமையான ஓட்டத்துக்கு நீங்களும் உபயோகியுங்கள்.’


3.மற்றவர் சினிமாப் புள்ளி. கொஞ்சமல்ல ரொம்பவே வயசாயிடுச்சு. இவருக்கு தோதாக கைப் பேசியைப் போடுவம்.

இவருக்கு பாக்கியம் கைப்பேசி விளம்பரம். ஏனென்றால் இவருக்கு கிடைக்காத பாக்கியம் அதுக்கு கிடைச்சிருக்கு.முதல்ல கைப்பேசியைச் சுற்றிச் சுற்றிக் காட்டிய பின் அதைப் பற்றி  இப்படி ஒரு தத்துவம் சொல்ல வைக்கலாம்.

‘இதைப் பாருங்க,இது விசேசமானது. இதன் அதிர்வுகள் மேலும் விசேடமானது.  குறுகிய இடத்தில், மிகவும் ஆழத்தில் இருந்தாலும் தொடர்பிலேயே இருக்கும். குளிரான இடங்களில் தானாகவே சூடாகும்.  நான் வெளியூரில் இருக்கும் போதெல்லாம் என் பொண்டாட்டி இதனாலேயே தொடர்பு வைத்து சந்தோசமாக இருப்பா. நீங்களும்  உங்கள் ,உங்கள் மனைவிமாருக்கு வாங்கிக் கொடுங்கள்.’

4. இன்னுமொரு சினிமாப் புள்ளிக்கு குளிர் பான விளம்பரம்.

நிறையவே  சூடாகி, மூஞ்சி அப்படியே செக்கச் சிவக்க கடைக்குள் வருகிறார்.  குளிர்ப் பெட்டிக்குள் இருந்து எடுத்தார் ஒரு தகர டப்பா. மடக், மடக் உள்ளுக்க இருந்ததை அப்படியே விழுங்கிய பின், முகத்தில் வியர்வை அடங்க நல்லாவே குளிராகின்றார். அப்புறமா கத்தத் தொடங்குகின்றார்.

‘ நான் நல்லவன் கிடையாது. அதுக்காக என் பொண்டாட்டியும் நல்லவள் கிடையாது. போட்டி போட்டு மாத்தி, மாத்தி சோடி பிடிச்சம். கடைசியில அவளுக்குத் தான் அதிக  துணைகள், அதிக இரவுகள். நான் ஆணாச்சே? கடைசியில எண்ணிக்கையைச் சரிப்படுத்து  பக்கத்து வீட்டு ஜிம்மியையும் கெடுக்க வேண்டியதாயிருச்சு. ஆனாலும் பாருங்க இதைக் குடித்த உடனேயே எல்லாம் பஞ்சாய்க் காற்றில் பறந்திடுச்சு.’

அப்படியே அந்த டப்பாவை நல்லா சுற்ற வைத்து முடிக்கச் சரி.

5. கடைசியாக சினிமா நடிகைக்கு ஒரு தொலைக்காட்சி.

வந்தவுடனேயே தொலைக் காட்சியை அணைத்த படி அதன் பெருமை, அருமைகளைச் சொல்லுகின்றா,

‘ இதைப் பாருங்க என்ன தான் தட்டையா பெட்டிகள் வந்தாலும், நமக்கு தள்ளிக் கொண்டிருப்பது தானே பிடிக்கும். அதனாலேயே இந்தப் பெட்டி. இதற்க்கு எல்லா விதமான உள்ளீடுகளையும் ஏற்றுக் கொள்ளும்  முறையில் வாங்கிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. சிறிதளவு சக்தி போதும், உடனடியாகவே காட்சிகள் தெரியும். தொலைவில் இருந்தே இயக்கியும் காட்சிகளைக் காணலாம்’.

முற்றும்.



June5, 2009

விலங்கு.

Filed under: சமுகம் — pukalini @ 04:18

அவன் பெயர் ரங்கன். உழைப்பாளி. நாட்டு நடப்புகளில் தெளிவு கொஞ்சம் குறைவு. முகவும் நல்லவன். அவனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவன் வேலை செய்யும் முதலாளியின் சித்தப்பா மகளுக்கும் ரங்கனுக்கும்  முடிவானது.

கன்னிமொழி. ஊருக்குள் அவள் தான் அழகி. கீறி விட்ட பப்பாசிப் பழம் போல செம்மையான தேகம்.  அசத்தும் அழகுப் பேழை. கலியாணம் முடிவானதும் இருவருக்கும் இடையில் காதல் கோளாறுகள் தொடங்கின. இரவு, பகல் பனி, மழை பாராமல் கொஞ்சலும், குலுங்கலும் அசர வைத்தன. பச்சைப் பசேலென்று பரவிக் கிடக்கும் வயல் வெளிகளும், மடை திறந்து சலசலத்து ஓடும் ஆற்று நீரும் சலித்துப் போயின. நேரங்காலம் தெரியாமல் வீட்டு  வேலிக்கப்பால் கேட்கும் விசில் சத்தம் கன்னிமொழியின் தூக்கத்தை விரட்டி விடும்.

வந்தான் வில்லன். தயா. பெயருக்கும் ஆளுக்கும் சந்தேகப் படும் தொடர்பு. கன்னிமொழியின் அடுத்த வீட்டான். நிறைய நாட்கள் கன்னிமொழியுடன் சொப்பனக் குடும்பம் நடத்தியவன். அவளுக்கும், இளிச்ச வாயனுக்கும் கலியாணமா? அவனுக்கு கொடுத்து வைத்திருக்குது. எனக்கு? முடிவு கள்ளுக் கொட்டகையில் தீர்மானமானது.

திருமணம் ஆகி 2 வருடங்கள் சடுதியாய் கரைந்து போக ஒரு குழந்தையுடன் கனிமொழி குடும்பம் நடத்தினாள்.

தயாவின் உள் அரிப்பு இன்னமும் தீர்ந்த பாடாகவில்லை. ‘டேய் ரங்கா உன் பொண்டாட்டியோட நான் ——-.

போய்ப் பாருடா’.

ரங்கனுக்கு என்னது அடுத்து என்று தெரியவில்லை.வீட்டுக்கு வந்தான். பொண்டாட்டியை கூட்டி அறைக்குள் போனான். கையிலில் விளக்கு. அப்படியே மனைவியின் பாவாடையைத் துக்கி விளக்கு வெளிச்சத்தில் எதையோ முறைத்துப் பார்த்தான். இருக்காது.

கப்பல் கடலில் போனாலும், வயலில் ஆயிரம் கலப்பை கொண்டு உழுதாலும் விளைச்சல் ஒன்று தான்.

ஆரம்பித்தது சனியன். இருவருக்கும் இடையில் இனம் புரியாத ஒரு விலகல். கன்னிமொழி என்ன செய்வாள்?  புருசனுக்கோ சந்தேகக் கோடு பெரிதாகிக் கொண்டே போனது. முடிவு வருசத்துக்கு ஒன்றாய் குழந்தைகள். பொண்டாட்டி விட்டுப் போகாமலிருக்க.

அவளுக்கும் உலகம் புரியவில்லை. தன் புருசன் கெட்டிக்காரன். புகுந்து விளையாடுறான் என்ற நினைப்பில் இருந்து விட்டாள்.எல்லாருமே புகுந்து விளயாடுவார்கள் தான் களமமைச்சா என்பது இன்னமும் புரியாமல் அடுத்த குழந்தையை வயிற்றில்  சுமக்கிறாள்.

Next Page »

Blog at WordPress.com.